சென்னை, ஜூன் 6- தமிழ்நாடு, புதுச்சேரி யில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 5 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்ற ழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஜூன் 6 ஆம் தேதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். மேலும் தமிழ்நாடு பகுதி களின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 10 வரை தமிழ்நாடு மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பி லிருந்து 2 - 4 டிகிரி செல்சி யஸ் இருக்கக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இவ்வாறு தெரிவித் துள்ளது.