states

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினரை விடுதலை செய்ய வேண்டும் : சிஐடியு

சென்னை, பிப்.11- ஜனநாயக முறையில் ஆர்ப்பாட் டம் செய்த டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் சிஐடியு  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மதுபான  வகைகளை  மொத்தக் கொள்முதல்  செய்து தனியாருக்கு சில்லரை விற்பனை செய்து வரும் நிறுவனமா கும். 2003 முதல் இந்த நிறுவனம்  சில்லரை விற்பனையில் மதுக்கூடங் களை நடத்தி வருகிறது.   தற்போது ஆண்டுதோறும் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டித்தருகிறது. இதில் ஏறத்தாழ 26 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்க ளது ஊதிய பிரச்சனை  மற்றும் பணி நிமித்தமான பிரச்சனைகள் குறித்தும் சில அதிகாரிகளின் அத்துமீறல்கள் குறித்தும் தொடர்ந்து தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) அரசுக்கு முறையிட்டு வருவதோடு ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்த பின்னணியில் கோவை மாவட்டத்தில் மதுக்கூடங்களை ஏலம்  எடுத்தவர்கள் அரசுக்கும் நிர்வாகத் திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தினசரி மாமூல் கேட்பது ,

வழங்காத ஊழியர்களை மிரட்டு வது, அதிகாரிகளின் துணையோடு ஊழியர்களை பணியிடை மாற்றம் செய்வது, பணி இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட  ஊழியர் விரோத பழிவாங்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.  இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை பேசப்பட்டுள்ளது. ஆனால் உரிய நடவடிக்கை என்பது  எடுக்கப்படாத நிலை தான் உள்ளது.  ஆகவே தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கம் மற்ற தொழிற்சங்கங்க  ளுடன் இணைந்து பிப்ரவரி 10 அன்று  கோவையில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  சிஐடியு மாநில துணைப்  பொதுச்செயலாளர்  கே.திருச் செல்வன் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில,  மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.  ஜனநாயக முறையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை கைது செய்ததை சிஐடியு வன்மை யாக கண்டிக்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய  வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி சுமூகமாக தீர்வு  காண வேண்டும் என்றும் சிஐடியு  தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.