states

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு ரத்தா?

சென்னை.ஜூன் 10- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் நடந்து முடிந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள்.  இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 11-ம்  வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்காது. மாணவர்களுக்கு மன  அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச் சுமை உள்ளிட்ட காரணங்களால்  பொதுத்தேர்வை ரத்து செய்ய தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதிக மதிப்பெண் கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனி யார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத் தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.   தற்போது 11-ம் வகுப்பு தேர்ச்சி  பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்கு சிக்கல்  ஏற்பட்ட காரணத்தினால் கல்வித் துறை யோசித்திருக்கலாம் என கல்வி யாளர்கள் கூறுகிறார்கள். 2022-2023  கல்வியாண்டில் அரசு பள்ளி மாண வர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.