சென்னை, மே 27- பால் உற்பத்தியாளர்களின் கொள் முதல் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் பி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆவின் கூட்டுறவு நிறு வனம் 1981 முதல் மூன்று அடுக்கு முறையில் செயல்பட்டு வருகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் 9,673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது ஆவின் கூட்டுறவு சொசைட்டி கள் மூலம் சுமார் 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக கால்நடை தீவனம், பருத்திக்கொட்டை, புண் ணாக்கு உள்ளிட்ட உலர் தீவனங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலை யில், பாலின் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், ஊக்கத்தொகை, மானிய விலையில் தீவனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் போராடி வரும் சூழலில், அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது.
பால் உற்பத்தியாளர்களின் இதர கோரிக்கை களை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆவின் நிறுவனம் கொடுப்பதை விட தனியார் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 ரூபாய் உயர்த்தி கொடுக்கும் சூழலில், ஆவினுக்கு பால் கொடுப்பதை தவிர்த்து தனியார் நிறு வனங்களை நோக்கி பால் உற்பத்தி யாளர்கள் சென்றுள்ளனர். மேலும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு திமுக அரசு விற்பனை விலையை ரூ.3 குறைத்தது. இதனால் ஆவின் நிறு வனத்திற்கு, ஆண்டு ஒன்றுக்கு 300 ரூபாய் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆவினுக்கு பால் கொடுத்த உற்பத்தியாளர்களுக்கு உரிய காலத் தில் பணம் பட்டுவாடா செய்வதில்லை. மேலும் கடந்த காலத்தில் 12 ஆயிரம் ஆரம்ப சொசைட்டிகள் செயல்பட்ட சூழலில், தற்போது சொசைட்டிகள் நலிவடைந்து மூடும் நிலை உருவாகி வருகிறது. மேலும் கடந்த காலத்தில் ஆவின் நிறுவனம் சுமார் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்த சூழலில் தற்போது 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனத்தின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக அதன் மார்க் கெட்டிங் பகுதி சுருங்கியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஹெரிட்டேஜ் போன்ற தனியார் நிறு வனங்கள் பல லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கின்றனர்.
தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கொள் முதல் விலை உள்ளிட்ட கோரிக்கை களை பரிசீலித்து நடவடிக்கை மேற் கொள்வதன் மூலம் ஆவின் கூட்டு றவு நிறுவனத்திற்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்ய முடியும். தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்காததன் காரண மாகவும், தனியார் நிறுவனங்கள் கூடு தல் விலை கொடுப்பதன் காரண மாகவும், ஆவினுக்கு பால் வரத்து குறைந்து ஹெரிட்டேஜ், திருமலா, ஹட்சன், ஆரோக்கியா, கெவின், எஸ்.என்.பி, சேவாமில்க், ராஜ்மில்க், கே.சி பால், அமிர்தா பால் போன்ற தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் கூடி யுள்ளது. தற்போது அமுல் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு ஆபத்து என கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, ஆவின் நிறுவனம் பாலுக் கான கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுத்தும், கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான கட்டு மானத்தை பலப்படுத்துவதன் மூலமே ஆவின் நிறுவனம் வலுப்பெறும். எனவே, தமிழ்நாடு அரசு பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று, ஆவின் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, ஆவினுக்கு கூடுதல் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறு வனத்தை பாதுகாத்து, பொது மக்களுக்கு தரமான பால் வழங்கவும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.