சென்னை,அக். 30- பொதுத்துறை வங்கி ஊழியர் ர்களை போல் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களுக்கும் கணினி ஊக்க ஊதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990களில் வணிக வங்கிகளில் ஊழி யர்களும், அலுவலர்களும் கணிணி மயத்தை எதிர்த்தும் ஓய்வூதியம் வழங்க க்கோரியும் ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும் போராடினர். இதன் விளைவாக நிர்வாகங்கள் பென்சன் கொடுக்கவும், கணினிமயத்திற்கு இன்கிரிமென்ட் தருவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் பென்சன், கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் போன்ற வற்றை கிராம வங்கிகளில் அரசு நடை முறைப்படுத்தவில்லை. . இந்திய அளவில் கிராம வங்கி களின் கோரிக்கைகளை அகில இந்திய பிராந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் முன்னெடுத்துச் சென்றாலும், அதன் அங்கமாய் இருந்த உறுப்பு சங்க ங்களும் தனித்தனியே போராட்டங் களை முன்னெடுத்து வந்தன. தமிழ் நாட்டில் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த கோரிக் கைகளை வலியுறுத்தி இயக்கங்களை முன்னெடுத்தது. கம்ப்யூட்டர் இன்கிரி மென்ட் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர் ஆணை யத்தில் தொழில் தாவா ஏற்படுத்தியது. வணிக வங்கிகளில் கொடுத்தது போல் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் வழங்க வேண்டும் என்று 2004இல் தொழி லாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகாவில் அகில இந்திய பிராந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில் வெற்றி கிடைத் தது. இந்த உத்தரவை எதிர்த்து நிர்வா கம் உச்சநீதிமன்றம் சென்றது. சுமார் 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 2018 ஏப்ரல் மாதத்தில் உச்சநீதி மன்றம் அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. அதன் பின்னர் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்சன் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் வழங்கு வதற்கான அறிகுறி மட்டும் தென்பட வில்லை. கொரோனா பேரிடர் தாக்கம் தணித் திருந்த 2021 அக்டோபர் மாதத்தில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து வங்கி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த வழக்கு சமீப த்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் ஒவ்வொருவருக்கும் கணினி மயம் ஆனதிலிருந்து இத்தனை ஆண்டு களுக்கு அரியர்ஸ் தொகையுடன் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராமப் புற ஊழியர் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது