சென்னை, ஆக.27- சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 23 அன்று தமிழக வணிக வரி- பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சங்க செயலாளர் ஜே. செல்வம் கலந்துகொண்டு, ஜி.எஸ்.டி வரி முறையில் தொழில் வணிகப் பெருமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்தார். அதன்விபரம் வருமாறு: விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக் கட்டணம் மீது ஜி.எஸ்.டி வரி விலக்கு 2022 செப்டம்பர் 30-வரை நீட்டிக்கப்பட்டிருந்தது; விமான மார்க்கமாக அனுப்பப்படும் ஏற்றுமதி சரக்குகளுக்கான கட்டணம் மீது 1.10.2022 முதல் ஜி.எஸ்டி 18 சதவீதம் விதிக்கப்பட்டது.
இதனால் மதுரை யிலிருந்து குறிப்பாக தென் தமிழகத் திலிருந்து விமான மார்க்கமாக ஏற்று மதி செய்யப்படும், எளிதில் அழுகக் கூடிய பொருட்களான மலர்கள், காய் கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி அந்தப் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக விமான சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் கிலோ ஒன்றுக்கு ரூ 150 என்றால் அதற்கான ஜி.எஸ்.டி ரூ 27 சேர்க்கும் பொழுது அந்தப் பொருளின் விலையை விட சரக்குகளுக்கான கட்டணமும், வரியும் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்றுமதி கடுமை யாக பாதிக்கப்பட்டு, தொழில் மந்த நிலையில் உள்ளது. சர்வதேச நாடு களில் ஏற்றுமதி மற்றும் அது தொடர் பான சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது போல நம் நாட்டிலும் ஏற்றுமதியை ஊக்கு விக்கும் வகையில் அதிலும் குறிப்பாக வேளாண் விளைபொருட்களின் ஏற்று மதி மற்றும் அது தொடர்பான சேவை களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக் கப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டு
நெறிமுறை வகுத்திடுக!
மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் (CGST) பதிவு பெற்ற ஒரு வணிகர் அவருடைய கணக்கு ஆவ ணங்களை குறிப்பிட்ட வருட / காலத் திற்கு CGST பரிசோதனைக்கு உட்ப டுத்தப்படும் போது மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) அதிகாரிகள் சட்டப் பிரிவு 67-இன் படி மேற்படி ஆவ ணங்களை பரிசோதிக்கும் அதி காரம் தங்களுக்கும் இருக்கிறது என்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் CGST / SGST அதிகாரிகள் ஆவணங் களை வணிகம் செய்யும் இடத்தில் பரி சீலனை செய்ய முற்பட்டால் அந்த வணிகளின் அன்றாட வணிகம் வெகு வாக பாதிக்கும். எனவே மேற்கண்ட சிர மத்தை போக்கும் வகையில் GST துறை அதிகாரிகளுக்கு தகுந்த வழி காட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி அதிகாரிகள் செயல்பட நட வடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஜி.எஸ்.டி ஆய்வு கணக்குகளின் போது மீட்பு முறை ( recovery mechani sm) நடைமுறையில் எவ்வித அடிப்படை விதிகளையும் துறைசார்ந்த அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. குறிப்பாக நீதித்துறை நடவடிக்கை செயல்முறைகள் (Judicial Proceedings) இயற்கை நீதி (Principle of natural justice) ஆகியவற்றை கடை ப்பிடிக்காமல் ஆணைகள் பிறப்பிக் கப்படுகின்றன. மேல் முறையீடுக்கான கால வரையறை இருந்தாலும் அதி காரிகள் அதை கருத்தில் கொள்வ தில்லை; அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குளையும் உடனடியாக முடக்கி விடுகின்றனர். ஜி.எஸ்.டி சட்டபிரிவு 83-இல் அதிகாரிகளுக்கு தற்காலிக இணைப்புகளுக்கான (Provisional attachments) சில அதிகாரங்கள் உள்ளன. குறிப்பாக வரி செலுத்தும் வணிகர் தனது வணிகத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது வணிகத்தை தொடராமல் இருந்தாலோ மேற்கண்ட அதிகாரத்தை துறை அதி காரிகள் பயன்படுத்தலாம். ஆனால் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றா மல் வணிகரின் வங்கி கணக்கை முடக்கம் செய்வதால் நன்றாக நடை பெற்று வரும் தொழில் வணிகம் முற்றி லுமாக முடங்கும் சூழ்நிலை ஏற்படு கிறது. எனவே மீட்பு முறை (recovery mechanism) குறித்து அதிகாரி களுக்கு உரிய வழிகாட்டுதல் நெறி முறைகளை அறிவிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் தமிழக அரசு வலியுறுத்துக!
ஜி.எஸ்.டி வரிமுறையில் வரி விதிக் கப்படுதல் (Demanded Tax) தொட ர்பான கோப்புகளை அதிகாரிகள் பார்க்கும் வரம்பு ஏற்கனவே வரையறுக் கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.20 லட்சம் வரி விதிப்புக்குள்ளான கணக்கு களை கண்காணிப்பாளரும் ரூ. 20 லட்சத் திலிருந்து ரூ. 2 கோடி வரை வரி விதிப் புக்குள்ளான கணக்குகளை உதவி ஆணையர்/ துணை ஆணையரும், இரண்டு கோடிக்கு மேல் வரி விதிப்புக் குள்ளான கணக்குகளை இணை ஆணையர் அந்தஸ்திலும் உள்ள அதி காரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. ஆனால் மாநில சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் வணிகரின் வரி விதிப்புக்குள்ளான கணக்கு ரூ.20 கோடி அல்லது ரூ.30 கோடி வரை இருந்தாலும் அத்தகைய கணக்குகளை DCTO/CTO அந்தஸ்துள்ள அதிகாரி களே ஆய்வு செய்கிறார்கள். இவர்கள் எவ்வித ரிஸ்க்கும் (risk) எடுக்க விரும்புவதில்லை. மேல் முறை யீட்டுக்கு சென்று நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள் என்று வணிகர்களிடம் கூறுகின்றனர். இதனால் மேல் முறையீட்டுக்கு செல்லும் வணிகர்கள் வழக்கு தொடுப் பதற்கு செலுத்த வேண்டிய வைப்புத் தொகையே பல லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவர்களது தொழில் வணிகம் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இவ்விசயத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் தெளிவான வழிகாட்டுதல்களை பிறப் பிக்க வேண்டும் என ஒன்றிய நிதி யமைச்சரிடம் தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.