கோவளம், அக்.6- தமிழ்நாடு - இலங்கை இடையே கப்பல் சேவையின் சோதனை ஓட்டம் துவங்கியது. கொச்சியில் இருந்து இலங்கை க்கு புறப்பட்ட படகு மோசமான வானிலை காரண மாக புதன்கிழமை மாலை 5 மணி க்கு விழிஞ்ஞம் சென்றடைந்தது. முன்கூட்டியே தகவல் தெரி விக்கப்பட்டதால் கப்பலை நிறுத்த அனைத்து வசதிகளும் செய்யப் பட்டதாக துறைமுக பர்சர் எஸ். வினுலால் மற்றும் உதவி துறைமுக பாதுகாவலர் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோர் தெரிவித்தனர். கப்பலில் தற்போது பயணி கள் இல்லை. 14 இந்தியர்களை கொண்ட பணியாளர்கள் உள்ளனர். இக்கப்பல் வியாழ னன்று காலை இலங்கை புறப் பட்டது.