வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம்
சென்னை, ஆக.16- வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும். தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள் மீது தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடரும். அதேபோல, தமிழில் கையொப்பமிடாத அரசுத் துறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நீர்வரத்து அதிகரிப்பு : ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை
சென்னைகோட்டயம், ஆக.16- காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்ததால் நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிப்பை தொடங்கியது ஃபாக்ஸ்கான்
சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்வதில் பிரச்சனை எழுந்ததை அடுத்து இந்தியா உள்ளிட்ட வேறு நாடு களுக்கு அதன் உற்பத்தியை மாற்றி வருகிறது ஆப்பிள் நிறுவனம். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங் களில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆக.20-ல் நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரதம்
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20-ல் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறி வித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணா விரத போராட்டம் நடைபெற உள்ளது.
ஐஐடி மாணவர்கள் தற்கொலையை தடுக்க பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
சென்னை, ஆக.16- சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத் தும் 250-300 பக்க அறிக்கையை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமை யிலான குழு ஐஐடியின் சமர்ப்பித்தது. சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வரு கிறது. நடப்பாண்டில் மட்டும் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தலைமை யிலான குழுவை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அமைத்தது. இந்தக் குழுவில் மொத்தம் 5 பேர் இடம்பெற்ற நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த குழு தற்போது முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 250 முதல் 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை யை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி ஐஐடி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்கள் இடையே இணக்க மான சூழ்நிலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் ஐஐடி நிர்வாகம் கண்காணிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளதாக கூறப் படுகிறது.
தங்கம் விலை ரூ.40 குறைந்தது
சென்னை, ஆக. 16- தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து உயர்வ தும், பிறகு கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதனன்று (ஆக.16) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10,000 சுயஉதவிக் குழுவிற்கு பயிற்சி: முதலமைச்சர்
சென்னை, ஆக. 16- இந்த ஆண்டு 10,000 சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. திட்டங்களை கண் காணிக்க, மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு (திஷா) ஆலோசனைக் கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் புதனன்று (ஆக.16) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரை யாற்றிய முதல்வர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது”என்றார். 3,000 கிராம ஒழிப்பு சங்கங்க ளுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஆட்சியர் அலுவலகங்களில் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் உணவகங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க ‘மதி’ என்ற வாகனம் வழங்கப்படும். அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டத்தை சிறிதும் தாம தமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டங்களை கண்காணித்தால் தான் அது தொடர்ந்து தொய்வின்றி நடை பெறும் என அவர் தெரிவித்தார்.