டேராடூன், ஜன. 17 - ஜோஷிமத் நிலவெடிப்பு தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரம், இமயமலைக்கும், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கும் நுழைவு வாயிலாக இருப்பதாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு கடந்த 2 வாரங்களாக நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்பு காரணமாக, 678 வீடுகளில் விரிசல் கண்டறியப்பட்டு, பாது காப்பு கருதி 81 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி, மாதம் ரூ. 5 ஆயிரம் வாடகைப்படி மற்றும் பல்வேறு வரிகளிலி ருந்து சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜோஷிமத் நகரம் முழுமையுமே மண்ணில் புதையும் ஆபத்தில் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘தேசிய ரிமோட் சென்சிங் மையம்’ (National Remote Sensing Centre -NRSC) கார்டோசாட்-2எஸ் செயற் கைக்கோள் புகைப்படங்களைக் காட்டி எச்ச ரித்துள்ளது. ஜோஷிமத் நகரம் டிசம்பர் 27 முதல் ஜனவரி 8 வரையிலான 12 நாட்க ளில் 5.4 செ.மீ. அளவிற்கு மண்ணில் புதைந்தி ருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜோஷிமத் நிலச்சரிவு மற்றும் நில வெடிப்பு சம்பவத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கக்கோரி சுவாமி அவி முக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்பவர் கடந்த ஜனவரி 11 அன்று உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. எல்லா வற்றிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற அவசியமில்லை” என்று கூறி விசார ணையை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான மனுவை உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.