states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தை ஜூலைக்கு தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்!

“உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு உத்தரவாதம் அளித்திருக்கும் போதிலும், மாநிலத்தில் கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே, மாநில அரசின் வெற்று உத்தரவாதங்களை நம்பாமல், மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடியினரைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்ப உத்தரவிட வேண்டும்” என்று மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று  கோரியிருந்தது. ஆனால், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அமர்வு, வழக்கை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெ ரிக்கா மற்றும் எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் செவ்வாயன்று தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். நியூயார்க்கில் ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மோடி,  ஜூன் 22 அன்று வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை  சந்தித்து உரையாடுகிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்விலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர் அவர் எகிப்து செல்கிறார். 

ஜெகதீஷ் ஷெட்டர், போஸ்ராஜூ வேட்பாளர்களாக அறிவிப்பு!

அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர்  ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் போஸ்ராஜூ, திப்பன்னப்பா கமாக்னூர் ஆகிய 3 பேர், கர்நாடக சட்ட மேலவைக்கான (MLC) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 135 எம்எல்ஏ-க்களும் வாக்களிக்கும் பட்சத்தில், இந்த 3 பேருமே சட்ட மேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், மூத்த தலைவரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ராஜூ ஏற்கெனவே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆதிபுருஷ்’ படத்திற்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு

“ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்  படுத்துவதாக உள்ளது. இந்த திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ராமர்  மற்றும் அனுமான் ஆகியோரை அவதூறு செய்கின்றன. இதனால், ஆதிபுருஷ் படத்தை திரையிடு வதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் வசன கர்த்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

நேபாள நாட்டிடம் மன்னிப்பு கோரியது ஆதிபுருஷ் படக்குழு!

ராமாயணத்தை மையமாக வைத்து, ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் - கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புக்கு  உள்ளாகி வருகிறது. இதனிடையே, இப்படத்தில் ‘ஜானகி இந்தியாவின் மகள்’ என்று இடம்பெற்றுள்ள  வசனத்திற்கு நேபாளத்திலும் எதிர்ப்பு எழுந்தது. தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் பகுதியில் பிறந்தவர் என நம்பப்படும் ஜானகியை இந்தியாவின் மகள் என்பதா? என்றும், இந்த வசனத்தை நீக்கும் வரை படத்தைத் திரையிட விடமாட்டோம் என்றும் நேபாளிகள் போராட்டம் அறி வித்தனர். இந்த நிலையில், ‘ஜானகி இந்தியாவின் மகள்’ என்ற வசனத்தை நீக்கி படக்குழு மன்னிப்பு  கோரியுள்ளது.

தமிழிசைக்கு சுற்றப்பட்ட திருஷ்டி பூசணி: ஆசிரம ஊழியர் காயம்

தெலுங்கானா சென்றிருந்த, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரண்டு நாட்க ளுக்கு முன்பு புதுச்சேரி திரும்பினார். அப்போது அவர் மணக்குள விநாயகர் கோயிலை  ஒட்டிய பகுதியில் (செயின்ட் லூயிஸ்வீதி) பின் வாசல் வழியாக ராஜ்நிவாஸ் செல்ல முயன்றுள் ளார். அப்போது ஆளுநர் மாளிகை பணியாளர்கள், அவருக்கு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி அங்கேயே  நடுரோட்டில் உடைத்துள்ளனர். பின்னர் அந்தப் பூசணியை அப்புறப்படுத்தாமலேயே விட்டுள்ள னர். இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரம ஊழியர் ஒருவர், பூசணி தடுக்கி விட்டு கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

மோடி அரசை கண்டித்து கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம்!

கர்நாடகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும்  திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த உள்ளதாக காங்கிரஸ் அரசு அறிவித்திருந்த பின்னணி யில், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள உணவுக் கழகம், இனிமேல் மாநில அரசுகளுக்கு அரிசியை விற்பதில்லை என்று முடிவெடுத்து அறிவித்தது. இது கர்நாடக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் பின்னணியில், மோடி அரசின் இந்த மக்கள் விரோத மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை, ஜூன் 20- கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடை பெற்ற குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப் பட்டது. பின்னர், மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, 10,117 காலிப் பணி யிடங்களுக்கு தகுதியானோர் தேர்வு  செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த எண்ணிக்கை அரசுப் பணி நாடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 2 ஆண்டுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு நடைபெறவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக் கான காலிப் பணியிடங்கள் 10,117-ல் இருந்து 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு கல்லூரிகளில் 72 ஆயிரம் இடங்கள் நிரம்பின

சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் மொத்தம் உள்ளன. இதற்கு 3 லட்சம் மாண வர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த  மாதம் 29 ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவ ர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 12 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் செவ்வாயன்று (ஜூன் 20) மாலையுடன் நிறைவு பெற்றது.  இந்த வருடமும் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதி யியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை  அறிவியல் பாடப் பிரிவுகளை மாண வர்கள் தேர்வு செய்தனர்.  2 ஆம் கட்ட கலந்தாய்வு மூலம்  75 ஆயிரம் இடங்களில் மாண வர்கள் சேர்வதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரம் காலி இடங்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வருடமும் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.  ஒரு சில கல்லூரிகளில் முக்கிய பாட ப்பிரிவுகள் நிரம்பினாலும் சில பாடப்பிரி வுகள் காலியாக உள்ளன. மேலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சில கல்லூரி களில் பாடப்பிரிவுகள் நிரம்பாமல் காலி யாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் 3-வது கட்ட கலந்தாய்வு புதனன்று (ஜூன் 21) இடங்கள் காலி யாக உள்ள அரசு கல்லூரிகளில் நடக்கி றது. அதிக மதிப்பெண் பெற்று இடங்கள் கிடைக்காத மாணவர்களின் பெயர் விவ ரங்களை சேகரித்து அவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 22 அன்று  தொடங்குகிறது.