states

img

பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் மாணவர்கள்

புதுதில்லி, நவ. 5- புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் - எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் அமைப்புகள் ஒன்று பட்டு ஒரு கூட்டு முன்னணியை உரு வாக்கியுள்ளன. புதிய கல்விக் கொள்கை (என்இபி), கல்வி வளாகங்களை மதவெறிமய மாக்கல் மற்றும் இடைவிடாத கட்டண உயர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், ஏஐஎஸ்எப், சிஆர்ஜேடி, திமுக மாணவரணி, என்எஸ்யுஐ, எஸ்எஸ் எஸ் என இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் அமைப்புகள் வியாழனன்று ஒன்று கூடி  புதிய மாணவர்கள் கூட்டு முன்னணி யை உருவாக்கின.

கூட்டறிக்கை

மாணவர்கள் முன்னணி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “கல்வித் துறையில் ஒன்றிய அரசின் அணுகு முறை முன்பை விட மிக மோசமாக உள்ளது. தற்போதுள்ள பொதுக்கல்வி முறையை குறைமதிப்பிற்கு உட் படுத்துவதையும், வகுப்புவாத அழிவுத் திட்டத்தின் மூலம் கல்வியை சிதைப்ப தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியமாக பாடப்புத்தகங்களில் “இந்தியா” என்ற நாட்டின் பெயரை நீக்கும் முயற்சியை பாஜக அரசு தொடங்கியுள்ளது. சங்பரிவார் சக்தி கள் நமது நாட்டின் கல்வித்துறை மற்றும் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் முற் போக்கான விழுமியங்கள் மீது தங்கள் தாக்குதல்களை மேலும் அதி கரிக்கக்கூடும் என்று சந்தேகிக்கி றோம். இந்த சவாலான பின்புலத்தில், நடந்துகொண்டிருக்கும் மாணவர் இய க்கங்களின் வேகத்தைத் தக்கவைக்க வேண்டியது அவசியமாகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. அறிக்கை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்க பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கையால் தூண்டப்பட்ட கட்டண உயர்வு மற்றும் கல்வி வளாகங் களை காவிமயமாக்குவது பொறுத்து கொள்ளப்படாது என்பதை மாணவர் களுக்குச் சொல்லும் வகையில் எங்கள் நாடு தழுவிய பிரச்சாரத்தை விரை வில் தொடங்குவோம்” எனத் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை முழு முட்டாள்தனம்

திமுக மாணவர் பிரிவின் தலை வரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பின ருமான சி.வி.எம்.பி.எழிலரசன் கூறுகையில், “தேசிய ஒருமைப்பாடு மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் கூட்டுப் பிரச்சாரத்தில் மாணவர் அமைப்புகள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளன. புதிய கல்விக் கொள்கை தனது பார்வையில் ஏழைகளையும் பின்தங்கியவர்களையும் புறக்கணிக் கிறது. பள்ளி அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை அரசு அமல்படுத்தும் என்று நமது முன்னோர்கள் மிகத் தெளிவாகக் கூறினர். ஆனால் தற்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கற்பிக்கப்படும் என்ற மும்மொழிக் கொள்கையின் வருகையை நாம் காண்கிறோம். ஏன் இந்தி திணிப்பை வலியுறுத்த வேண்டும்? இடஒதுக்கீடு மற்றும் உறுதி யான நடவடிக்கையைக் கூட குறிப்பிடாத புதிய கல்வி  கொள்கையை ஒன்றிய அரசு ஆதரிப்பது கொடுமை யானது. நீட் தேர்வுக்கு மாணவர்களால் விலையுயர்ந்த பயிற்சி பெற முடியவில்லை. அதனால் பல நீட் தேர்வாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மட்டுமல்ல; மூன்று, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் கூட மாணவர்கள் தேசியத் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பது முழு முட்டாள்தனம்”என விமர்சித்தார்.

அதீத கட்டணங்கள்

ஐக்கிய ஜனதாதள மாணவர் பிரிவான சிஆர்ஜேடி ஜேஎன்யு பொதுச் செயலாளர் பிரியங்கா பாரதி கூறுகையில்,”நான் பீகாரைச் சேர்ந்தவள். சேர்க்கை தொடர்பாக மாணவர்களிடையே பெரும் குழப்பமும், கவலையும் உள்ளது. பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் (CUET) மூலம் பாஜக அரசு மேற்கொண்டுள்ள தனியார்மயமாக்கல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் நுழைவுத் தேர்வுக்கு கட்டணம், பின்னர் பல்கலைக்கழக பதிவு மற்றும் இறுதி யாக கல்வி கட்டணங்கள் என நிலை உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் கட்டணம் செலுத்த யாரால் முடியும்? கல்வி கட்டணம் உயர்த்தப்படாத ஒரு வளாகத்தின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? ஜேஎன்யு போன்ற மாணவர் இயக்கம் மிகவும் வலுவாக உள்ள வளாகங்களில் கல்வி கட்டண அதிகரிப்பு முடிவுகளை எதிர்க்கலாம், ஆனால் மற்ற வளாகங்களில் உள்ள மாணவர்களுக்கு வேறு வழியில்லை. கல்வி மீதான தாக்குதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வது மிகவும் முக்கியம். பள்ளி மற்றும் உயர்கல்வியில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் எவ்வித பலனையும் ஏற்படுத்தாது. இதுவரை நாம் பெற்ற கல்வியின் கட்டமைப்பு அனைத்தையும் மாற்றும். மக்களிடம் இது பற்றிய புரிதல் மிகக் குறைவு என்பதால் தான் “புதிய கல்விக்கொள்கை வேண்டாம், இந்தியாவை காப்பாற்ற, பாஜகவை நிராகரிக்க வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளோம்” என்றார்.