சென்னை,நவ.4- சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு ஆகிய பகுதி களில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் .அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் நவம்பர் 4 அன்று கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு: சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு (தெற்குத் தெரு), திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றன. இந்த வீடு களுக்கு வீட்டு வரி, குடிநீர் - கழிவு நீர் வரி களையும் முறையாக செலுத்தி வருகின்ற னர். ஆதார் மற்றும் குடும்ப அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை உள்ளிட்டு அனைத்தும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண். 300, நாள் 18.04.1994 மூலம் கொளத்தூரில் புல எண் 53 இல் உள்ள 67.30 ஏக்கர் நிலத்தை அரசு ஊழி யர்களுக்கு மாடி வீடு கட்டும் திட்டத்திற் காக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டது. இதற்கு முன்னதாக, இத்திட்டங் களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மேற்படி நிலம் அமைந்துள்ள ஏரியைக் கைவிட்டு பொதுப்பணித்துறையிலிருந்து 29.6.1993 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 975 ஆணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 மே மாதத்தில் மேற்கண்ட பகுதி நீர்நிலை புறம்போக்கு என்றும், இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டுமென தெரிவித்து நீர்வளத்துறை, செங்குன்றம், பாசனப்பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோகிறதே என்று கடும் அதிர்ச்சிகளுக்கு உள்ளானதோடு அதி காரிகளின் நடவடிக்கைக்கு ஆட்சேபணை யும் தெரிவித்தனர். இது சம்பந்தமாக தங்களி டமும் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.
இப்பிரச்சனை சம்பந்தமாக 2022 மே 27 அன்று தங்களை நேரில் சந்தித்து இம்மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டு மென வலியுறுத்தியுள்ளேன். தற்போது மீண்டும் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த 17.10.2022, 18.10.2022 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் வாங்க மறுத்த மக்களின் வீடு களில் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றுள்ள னர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் , இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு, தங்களின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளு வர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர் சர்ச் தெரு - நீலமேகம் தெருவில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் 3 ஆயிரம் குடும்பங்கள் அப்பகுதியிலேயே நிரந்தரமாக குடியிருப்ப தற்கு நிலவகை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு அம்மக்களை அங்கேயே குடியமர்த்தி பாதுகாக்க வேண்டும். அம்மக்களை வெளியேற்றுவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.