சென்னை, ஏப்.13- தமிழ்நாட்டில் செங்கல் உற்பத்தி செய்ய மண் எடுப்பதற்கான வழி முறைகள் எளிமையாக்கப்பட்டுள் ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். செங்கல் உற்பத்தி செய்ய தேவை யான மண் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தளவாய் சுந்தரம்(அதிமுக), கோ.தளபதி (திமுக), ரூபி ஆர். மனோகரன்(காங்.) ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய துரைமுருகன், “தமிழ்நாட்டில் செங் கல் உற்பத்தி செய்ய மண் எடுப்ப தற்கு விதிகளை எளிமைப்படுத்தி யிருக்கிறோம். குறிப்பாக, 1959 ஆம் ஆண்டின் சிறு கனிம சலுகை விதிகளில், செங்கல் சூளைகளை பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவுச் சான்று மூன்றாண்டு காலத்திற்கு செல்லும். அதன்பிறகு, 50 விழுக்காடு மட்டுமே கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள லாம்” என்றார். தொடர்ந்த பேசிய அவர்,
செங்கல் சூளை உரிமையாளர்கள் பட்டா நிலங்களில் மண் எடுப்ப தற்கு 19(2) விதியின்படி உரிமைக் கட்டணம் செலுத்தினால் போது மானது. மேலும், பட்டா நிலங்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மண் எடுக்க கனிம வளத்துறையின் மாவட்ட உதவி இயக்குநர் மூலமே அனுமதி வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைகளால் தற்போது செங்கல் உற்பத்தியும் அதிகரித்திருக் கிறது. விலையும் குறைந்து வருகிறது என்றும் கூறினார். கடந்த காலத்தில் மண் எடுப்ப தற்கு தடை விதித்ததால் மண் பாண்டம் செய்துவரும் பல்லாயிரக் கணக்கானோர் வாழ்க்கையே பிரச்சனையானது. அன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களி டம் இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்த னர். எனவேதான், இதுகுறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தி னேன். சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவ ள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மண் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முழுமையாக நீக்கியிருக்கி றோம். தற்போது, மண்பாண்டத் தொழிலாளர்கள் விவசாய நிலத்தி லிருந்து இலவசமாக மண் எடுத்துச் செல்லலாம். எந்த தடையும் கிடை யாது. மேலும் விதிமுறைகளை எளிமைப்படுத்தியிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.