states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

ஒடிசா ரயில் விபத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது  டுவிட்டர் பக்கத்தில், “ஒடிசா வில் நிகழ்ந்த துயரமான ரயில் விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். சமீப  காலங்களில் ஒப்பிடுகையில் மிக மோசமான அளவில் நிகழ்ந்துள்ள இந்த ரயில் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் உய ராமல் தடுக்க அதிகாரிகள்  போர்க்கால அடிப்படையில்  விரைந்து மருத்துவ சேவை யை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

30 : 3

ஒடிசாவில் விபத்துக்குள் ளான கோரமண்டல் எக்ஸ்   பிரஸ், கடந்த 30 ஆண்டு களில் மூன்று முறை தடம்  புரண்டது. இதில் முக்கிய மான விஷயம் என்னவென்  றால் அனைத்து விபத்து களும் வெள்ளிக்கிழமையன்று நடந்தன. 2009இல் ஒடிசா வின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை மாற்றும் போது ரயில் தடம் புரண்ட தில் சுமார் 16 பயணிகள் உயி ரிழந்தனர். 2002இல்  பல பெட்டிகள் நெல்லூர் அருகே  தடம் புரண்டதில் 100 பயணி கள் காயமடைந்தனர். தற்  போது ஒடிஷாவின் பாலசோர்  பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள் ளாகியுள்ளது.

துணி கூட போர்த்தவில்லை பணம் இல்லையா?

கோரமண்டல் எக்ஸ் பிரஸ் ரயில் விபத்தில் பலி யானவர்கள் உடல்களை அருகில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களில் ஒரு சாதாரண துணி வைத்து  கூட உடல்களை போர்த்தா மல் அப்படியே வைக்கப் பட்டு இருந்தது. இடிபாடு களில் சிதைந்த உடல்கள் ரத்தக் கசிவோடு ஏதோ குப்பை போன்று கிடந்தன. வெள்ளைத் துணி அல்லது  வெள்ளை வேட்டி ஏற்பாடு  செய்ய எவ்வளவு நேரம்  ஆகப் போகிறது. இதைக்கூட  ஒன்றிய பாஜக அரசு, ஒடிஷா  மாநில அரசு, ரயில்வே நிர்  வாகம் செய்யாமல் அலட்சி யமாக இருந்தது கடும்  விமர்சனத்திற்கு உள்ளாகி யுள்ளது.

56 பேர் கவலைக்கிடம் 

ஒடிசா ரயில் விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி  288 பேர் பலியாகியதாக அறி விக்கப்பட்டது. 747 பேர்  காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 56 பேரின்  நிலைமை அபாயகரமான நிலையில் உள்ளது. இத னால் பலி எண்ணிக்கை உய ரும் என எதிர்பார்க்கப்படு கிறது. 

3 நாளில் ரயில் போக்குவரத்து

ஒடிசா மாநிலம் பால சோரில் விபத்துக்குள்ளான ரயில்களின் பெட்டிகள், கிரேன் மற்றும்  ராட்சத இழு வை தூக்கியின் உதவியுடன்  சனியன்று இரவு அகற்றப் பட்ட நிலையில், நாளை மறு நாள் அல்லது 3 நாட்களுக்  குள் பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில்வே போக்கு வரத்து தொடங்கும் என தக வல் வெளியாகியுள்ளது.

‘தலித்துக்கள், முஸ்லிம்கள் பற்றி ராகுல் கூறியது உண்மைதான்’

“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சுற்றுப் பய ணத்தின்போது, கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பரிதாபகர மான நிலை, அவரது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர்  கூறியிருப்பது கசப்பான உண்மை ஆகும். இதற்கு ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரஸ்,  பாஜக மற்றும் பிற கட்சிகள்தான் பொறுப்பாவார்கள்” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி.  முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

மனைவியை பார்க்க ஒருநாள் ஜாமீனில் வந்த மணீஷ் சிசோடியா!

தில்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், சிசோடியா வின் 49 வயது மனைவி சீமா சிசோடியாவுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சனை உள்ள நிலையில்,  அவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் தில்லியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியா விற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி சிசோடியா சனிக்கிழமையன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாகிஸ்தான் சிறைகளில் இருந்த 200 இந்திய மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கைது செய்  யப்பட்ட சுமார் 200 இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை யை தொடர்ந்து கடந்த மே 12-ஆம் தேதி, ஏற்கெனவே 198 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட னர். இதன் அடுத்த கட்டமாக ஜூலை மாதம் மேலும் 100 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 1,188 படகுகள், பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பின் அமைப்பின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றையும் விரைவில் மீட்டுத் தர வேண்டுமென மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

தெலுங்கானா தின கொண்டாட்டம்: தனித்து விடப்பட்ட தமிழிசை!

ஆந்திராவிலிருந்து 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தெலுங்கானா தனிமாநிலமாக உருவானது. இதன் பத்தாவது ஆண்டு துவக்கவிழாவை, கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி அரசு, 21 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடுகிறது. ஆனால், தெலுங்கானா உதய தின துவக்க விழாவிற்கு, மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. வேண்டுமானால், அவர் ஆளுநர் மாளிகையிலேயே உதயதினத்தை கொண்டாடிக் கொள்ளட்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய  பாஜக அரசு, ஆளுநர்கள் மூலம் மறைமுகமாக ஆட்சி நடத்த முயற்சிப்பதாகவும், அதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆளுநர் புறக்கணிப்பு ஆயுதத்தை, சந்திரசேகர ராவ் அரசு கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா அரசு தன்னுடன் இல்லாவிட்டாலும், தெலுங்கானா மாநில மக்கள் தன்னுடன் இருக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டுள்ளார். 

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படும்: பாபுராம் பட்டாராய்

“இந்தியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தில் அகண்ட பாரதம் சுவரோவி யம் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரோவியம் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது  தூதரக உறவுக்கு அபாயகரமானது. இந்தியாவுடனான பெரும்பாலான அண்டை நாடுகளுட னான உறவில் சிக்கல் நிலவும் சூழலில் இதுபோன்ற சுவரோவியம் மேலும் இத்தகைய உறவுச் சிக்கலை மோசமாக்கும். நேபாளத்துடனான உறவில் விரிசல் ஏற்படும். இது நம்பிக்கையை சிதைக்கும் செயல்” என்று நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் புகார்களை புறந்தள்ளக் கூடாது: பாஜக எம்பி

“எந்தப் பெண் புகார் கொடுத்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.  அதைப் புறம்தள்ளிவிடக் கூடாது. மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசா ரிக்கப்பட வேண்டும். அதேசமயம் முழுமையாக விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று பாஜக எம்.பி. ப்ரீதம் முண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ப்ரீதம் முண்டே, பாஜக மூத்த தலைவராக விளங்கிய கோபிநாத் முண்டே-வின் இளைய மகள் மற்றும் மகா ராஷ்டிராவில் பாஜக அமைச்சராக இருந்த பங்கஜா முண்டேவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒடிசா ரயில் விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு  முதல்வர் ஆறுதல்

சென்னை, ஜூன் 3- ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டா லின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில்  காயமடைந்தவர்களுக்கு தேவை யான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்து வக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளேன். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனிக் கிழமை (ஜூன் 3) ஒரு நாள் மட்டும் துக்கம்  அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிமுக  பொதுச் செயலாளராக  வைகோ மீண்டும் தேர்வு

சென்னை, ஜூன் 3- மதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் வைகோ தேர்வு செய்யப் பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார். மதிமுகவின் 5ஆவது அமைப்புத்  தேர்தல் தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், கிளைக் கழகம், வட்டக் கழகம், பேரூர் கழகம்,  நகரக் கழகம், ஒன்றியக் கழகம், பகுதிக்  கழகம், மாவட்டக் கழகம், மாநகர்  மாவட்டக் கழகம் ஆகிய அமைப்பு களின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி  நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நிறைவாக தலைமைக் கழக நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய  பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள்  வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப் பட்ட வேட்பு மனுக்களைப் போட்டியிடு பவர்கள் தலைமைக் கழகம் தாய கத்தில் தாக்கல் செய்தார்கள். சனிக் கிழமை (ஜூன் 3) பிற்பகல் 3 மணி  வரை வேட்புமனுக்களை திரும்பப்  பெறுவதற்கு அவகாசம் அளிக்கப் பட்டது. எவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. எனவே, வேட்பு மனு வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். அதனடிப்படையில் பொதுச்செய லாளர் பொறுப்பிற்கு வைகோ, அவைத்  தலைவர் பொறுப்பிற்கு ஆடிட்டர் அ.அர்ஜூன ராஜ், பொருளாளர் பொறுப்பிற்கு மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மல்லை சி.ஏ.சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரயில் விபத்து:  வைகோ இரங்கல்

ஒடிசா ரயில் விபத்தில் பலியான  பயணிகள் எத்தனை திட்டங்களோ டும், கனவுகளோடும் பயணித்திருப் பார்கள். அந்தத் திட்டங்களும், கனவு களும் தவிடுபொடியாகி விட்டன. கொடிய ரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு என் நெஞ் சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக தெரிவித்துக்கொள்கின்றேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும். காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம்பெற வேண்டுமென இயற் கையை வேண்டுகிறேன்.