சென்னையில் இருந்து மைசூரு செல்லும் சதாப்தி விரைவு ரயிலு டன் “வந்தே பாரத்” ரயிலை ஒப்பிடுகையில் வெறும் 20 நிமிடங்களே வித்தியாசம்; மேலும், வந்தே பாரத் ரயிலுக்கு அதிகப்படியான கட்ட ணம் வசூலிப்பதால் பய ணிகளிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் அடுத்த சேலை யூர் அட்வென்ட் கிறிஸ் தவ தேவாலயத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி அனைத்து மதம் மற்றும் சமுதாயத்தை சேர்ந்தவர்களை அழை த்து 5,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு சமத்துவ விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது தேவாலய நிர்வாகம்.
தில்லி மதுபான முறை கேடு வழக்கில் தொடர் பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்எல்ஏ வுமான கவிதாவிடம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ., அதிகாரிகள் தீவிர விசார ணை மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப் பட்ட நிலையில், 7 நாட் களுக்கு பிறகு காரைக் கால் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஞாயிறன்று அதிகாலை முதல் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலு க்கு மீன்பிடிக்கசென்றனர்.
மாநகராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். ஆதேஷ் குப்தாவின் ராஜி னாமாவிற்கு பாஜக தலை மை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், துணை தலை வராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வென்று மாநகராட்சியை கைப் பற்றியது. பாஜக 104 இட ங்கள் மட்டுமேவென்றது.
கடல் சீற்றம், தேங்கி நிற்கும் மழை நீர் காரண மாக சென்னை மெரினா வில் ஞாயிறன்று பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் நிலையில், தரிசன நேரம் இரவு 11:30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் இரவு 11 மணிக்கு சபரி மலை அடைக்கப்படும் வழக்கம் இருந்தது.
“அரசியல்வாதி ஆக வேண்டும் என்று நினை ப்பவர் யாராவது பாஜக வில் சேர்ந்தால் வாழ்க்கை யே வெறுத்து ஓடிவிட வேண்டிய சூழல் ஏற் படும். மற்ற கட்சிகள் எதிரி யார் என்று முடிவு செய்து விட்டு அவர்களை குறி வைத்து தாக்குவார்கள். ஆனால் பாஜகவிற்குள் மட்டும் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று யாரையும் தலைதூக்க விடாமல் அடிப்பார்கள். இப்படி கட்சிக்குள் இருப் பவர்களையே எதிரி களாக காலி செய்கின்ற னர்” என அண்மையில் பாஜகவில் இருந்து வெளி யேறிய திருச்சி சூர்யா தெரிவித்து உள்ளார்.