சனாதனத்துக்கு எதிராக செயல்பட்ட அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் மன்னருடைய கோபத்துக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டார். அய்யா வைகுண்டர், மக்கள் மத்தியில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதற்காக சமபந்தி விருந்து, முத்திரி கிணறு போன்ற ஏற்பாடுகளை செய்து அனைத்துச்சாதியினரும் சமம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அவர் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும், இந்து மதத்தில் நடைமுறையில் இருந்த மூடத்தனங்களையும் கடுமையாகச் சாடினார். அன்றைய காலத்தில் நமது நாட்டில் கல்வி, இயல், இசை, நாடகம், விளை யாட்டு என அனைத்தும் பார்ப்பனியர்களே பயன்படுத்தி வந்தனர். சூத்திரர்கள் எனப்படும் அடிமைகள் வேதங்களை படிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர்கள் காதில் கேட்டு விட்டாலே போதும், அவர்களின் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும் என்றும், வேதங்களை சொன்னால் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும் என்றும் சனாதனம் பல கட்டுப்பாடு களை விதித்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்விதக் கொடுமையை எதிர்த்து அய்யா வைகுண்டர், நாராயணகுரு, அய்யன்காளி, ஜோதிராவ்பூலே, ராஜாராம் மோகன்ராய், சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் போராடியதால், இன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் பலர் கல்வி யிலும், கலையிலும், விளையாட்டிலும், உயர் பதவிகளிலும் ஓரளவு பங்கேனும் பெற்றுள்ளனர்.இதைக்கூட பொறுத்துக் கொள்ளாத பார்ப்பனியம் கடும் கோபத்தில் காட்டு தர்பாரில் ஈடுபடுகிறது. தலையை சீவி விடுவேன், நாக்கை அறுத்து விடுவேன் என கொந்தளிக்கிறது. தன்மானம் இல்லாத, சுயமரியாதை இல்லாத கடந்த கால வரலாறு தெரியாத சில சுய நலக்காரர்கள் அய்யா வைகுண்டரை பற்றி மிக இழிவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவ்வித அறிவிலிகளை, கைக்கூலிகளை மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. தமிழக அரசு இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.