states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்துத்துவா அமைப்பு களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப் பில் வெளியான “பதான்”  திரைப்படம் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 700 கோடியைத் தாண்டி யுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.364 கோடி வசூ லாகியுள்ளது என திரைப் பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தகவல் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபல மென் பொருள் நிறுவனமான அமெரிக்காவின் ஆட் டோடெஸ்க் இன்க் உலக ளவில் 2% ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போலவே ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள சில கட்டிடங்களில் விரி சல் ஏற்பட்டுள்ளது. தரை மட்ட கட்டிட அமைப்பு களும் (தரைத்தளம்) விரி சல்களில் மூழ்குவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த “ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்” விமான இன்ஜி னில் திடீரென புகை வந்த தால் மீண்டும் அபுதாபி யில் தரையிறக்கப்பட் டது. விமானம் அபுதாபி யில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே புகை வந்ததால் 184 பயணிகள் அதிர்ஷ்டவச மாக உயிர்தப்பினர்.

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் மக்கள் தொகையில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 332 பேர்  குறைந்துள்ளனர். ஜனவரி 1, 2023 ஆம் தேதிக்கான கணக்குப்படி  கடந்த ஆண்டை விட மக்கள் தொகை குறைந்துள்ளது என்று  அந்நாட்டின் மத்திய புள்ளிவிபரச் சேவை அலுவலகம் அறிவித்திருக் கிறது. ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமும், அந்நாட்டின் தலைநகரு மான மாஸ்கோவில் 1 கோடியே 30 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 56 லட்சம் பேர் தற்போது வசிக்கிறார்கள்.

ஜப்பானில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த இருபது  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தெருக்களில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று ஜப்பான்  காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. கொலைகள் உள்ளிட்ட பெரும் குற்றங்கள் 8.1 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருக்கின்றன.

மியான்மரில் அதிகாரத்தில் உள்ள ராணுவ ஆட்சிக்கு ஆதர வான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்திருக்கிறது. 2021-ஆம்  ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜன நாயக மீட்புக்குப் போராடிய ஆங் சான் சூகி மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது உக்ரைன் விவகாரம் எழுந்ததில், ரஷ்யா பக்கம் மியான்மர் போய்விடக்கூடாது என்பதற்காக ஆதரவு நிலையை அமெரிக்க எடுத்திருக்கிறது.