states

சீமான், திருமுருகன் காந்தி டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? - காவல்துறை விளக்கம்

சென்னை, ஜூன் 1- சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கத்திற்கு தமிழ்நாடு காவல்துறை பரிந்துரை செய்யவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானின் ட்விட்டர் கணக்கு புதனன்று (மே 31) திடீரென முடக் கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக் கையை ஏற்று சீமானின் அதிகாரப் பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று  டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. மே 17  இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி டுவிட்டர் பக்கமும் முடக்கப் பட்டது. சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.  இந்த நிலையில் சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட் டோரின் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு சீமான் நன்றி தெரிவித் துள்ளார்.

;