மும்பை, ஜூன் 22- பெரும் கடன்சுமையில் இருப்பதாக கூறப்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.155 கோடி நன்கொடை வழங்கியுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் ரொக்க நன்கொடைகளுக்கு மாற்றாக 2018இல் ஒன்றிய பாஜக அரசாங்கத்தால் தேர்தல் பத்திரத் திட்டம் தொடங்கப் பட்டது. 2017 நிதி மசோதாவுடன் இணைத்து சட்டப்பூர்வமாக்கி, மோடி அரசு செய்த மோசடிதான் தேர்தல் பத்திரம். இதன்படி, எந்தவொரு தனிநபர் அல்லது நிறு வனம், பாரத ஸ்டேட் வங்கியின் எந்த வொரு கிளையிலும் எவ்வளவு வேண்டு மானாலும் பணம் செலுத்தி ‘பத்திரங் களாக’ப் பெற்று (Bond), அந்தப் பத்தி ரங்களை, தாங்கள் விரும்பும் எந்த வொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை யாக வழங்கலாம். இதில், யார், யாருக்கு நன்கொடை அளிக்கிறார்கள் என்ற விபரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டியது இல்லை. 2018 மற்றும் 2022க்கு இடையில் பாஜக தான் அதிக அளவில் தேர்தல் பத்தி ரங்கள் மூலமான நன்கொடைகளைப் பெற்று, ரூ.5,270 கோடி பணமாக்கி யுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.964 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை யின் தாய் நிறுவனமும், பன்னாட்டு சுரங்க பகாசுர நிறுவனமுமான வேதாந்தா லிமிடெட் 2022-23 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் (பங்குச் சந்தை வெளிப்பாடுகளின்படி) ரூ.155 கோடி நன்கொடை அளித்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.32 கோடி அதிகமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. அதாவது 2021-2022 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் வேதாந்தா ரூ.123 கோடி நன்கொடை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.457 கோடி நன்கொடையாக வழங்கி யுள்ளது வேதாந்தா.
4 ஒப்பந்தங்களும் நன்கொடைகளும்
வேதாந்தா நிறுவனம் பெரும் கடன் சுமையில் உள்ளது என்று சொல்லப் பட்டாலும், கைமாறு பெறும் நோக்கத்து டன் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவுக்கு அளித்து வரும் நன்கொடை யை அந்நிறுவனம் குறைக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நன்கொடையை அதிகரித்துதான் அளித்து வந்துள்ளது. இது பலத்த சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலை யில், சந்தேகத்திற்கு வலுவூட்டும் வித மாக ஒரே ஆண்டில் (2022-2023) 4 முக்கிய சுரங்க தொகுதிகளை ஏலம் மூலம் கைப்பற்றியது வேதாந்தா. கோவாவில் உள்ள பிச்சோலிம் இரும்புத் தாதுத் தொகுதி, ஒடிஷாவின் சிஜிமாலி பாக்சைட், கோகர்பள்ளி நிலக்கரி சுரங்கம், சத்தீஸ்கரில் உள்ள கெல்வார் தாப்ரி உள்ளிட்ட சுரங்க ஏலத்தில் ‘வெற்றி’ பெற்றது. வேதாந்தா லிமிடெட்டின் முதன்மை நிறுவனமான - பிரிட்ட னைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தா ரிசோர்சஸ் (விஆர்எல்), தனது தொழிலில், பல்வேறு வகை களில் செலுத்திட வேண்டிய பாக்கித் தொகையாக, நடப்பு நிதியாண்டில் மட்டும் 4.2 பில்லியன் டாலர் (ரூ.34,420 கோடி) நிலுவை வைத்துள்ளது. இதற் காக இந்நிறுவனம், கண்காணிப்பின் கீழ் உள்ளது. ஜூன் 2023 நிலவரப்படி 2 பில்லி யன் டாலர் (ரூ.16,390 கோடி) மட்டுமே வேதாந்தா லிமிடெட் செலுத்தியுள்ளது. பாக்கி நிலுவை ஒருபக்கம் இருந்தாலும் நடப்பு நிதியாண்டில் வேதாந்தா மூலதனச் செலவினங்களுக்கு 1.2 பில்லியன் டாலர் (ரூ.9,835 கோடி) முத லீடு செய்துள்ளது. மேலும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக அடுத்த நிதி யாண்டில் மேலும் 1.7 பில்லியன் டாலர் (ரூ.13,9335 கோடி) உறுதி செய்வதாக அறிவித்துள்ளது.
எழும் சந்தேகம்
வேதாந்தா நிறுவனம் பெரும் கடன் சுமையில் உள்ளது என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. கடன் சுமையில் இருக்கும் நிறுவனம் எப்படி அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக, பாஜ கவுக்கு நன்கொடையை ஆண்டு தோறும் அதிகரிக்க முடியும் என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தை வாரியிறைத்து, பாஜக அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொள்கிற கூட்டுக் களவாணித் தனத்தின் ஒரு வடிவமே இது!