சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் கடந்த செப்., 2 அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், வெள்ளியன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி 4-வது முறையாக வெற்றிகரமாக நடைபெற்றது.
செப்., 18 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொட ரின்போது, மகளிருக்கான 33ரூ இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
இயற்கை பேரிடரால் இமாச்சலப் பிரதேச மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.51 லட்சத்தை மாநில முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது; இன்னும் 400 ஏக்கர் நிலம் நவம்பருக்குள் ஒப்படைக்கப்படும். பின்பு கட்டுமான பணிகள் தொடங்கி 12 மாதத்திற்குள் முடிவடையும் என தூத்துக்குடியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 15 நாட்களில் புதுச்சேரியில் இதுவரை 64 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் மட்டும் டெங்குவால் 1195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 34 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயண மாக கொண்டு செல்லப்பட்ட 50 ஓவர் உலகக்கோப்பை, சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் வெள்ளியன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அடுத்த மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி காவல் ஆணையரக பகுதியில் தனிப்படை போலீசாரின் ஆப்ரேசன் வேட்டையில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2023 செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வுமுடிவுகளை http://unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 18 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.