மதுரை, ஜூன். 30- சாத்தான்குளம் வணிகர்களான தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ் , அவரது மகன் பென்னிக்ஸ் ஆகி யோரை சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூர மாகத் தாக்கினர். இதில் அவர்கள் இரு வரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 9 பேர் மீது குற்றப்பத்திரிகையை கடந்த 2020 செப்டம்பரில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு மேலும் 5 மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிடுகை யில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே தாமதமாகியது. சிபிஐ தரப்பில் தற்போது வரை 8 முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப் படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப் பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.