சென்னை,ஏப்.29- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணை திருத்த சட்ட முன்வடிவை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்து பேசினார். அப்போது, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ருக்கான மாநில ஆணையச் சட்டம், மாநில ஆணையத்தின் தலைவர், துணைத் தலை வர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம், படித்தொகைகள் வழங்க மட்டுமே வகைசெய்கிறது. இதற்கு பதிலாக, ஊதியங்கள் மற்றும் படித்தொகைகளை வழங்குவதென அரசு தற்போது முடிவு செய்துள்ளது. எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்க மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.