states

சமத்துவ சமூகமே இந்தியாவின் கலாச்சாரம் வர்ணத்திலும், சாதி அமைப்பிலும் ஆரம்பத்தில் பாகுபாடு இருந்ததில்லை!

நாக்பூர், அக். 8 - “வர்ணம், சாதி போன்ற கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். டாக்டர் மதன் குல்கர்னி, ஆர்எஸ் எஸ் தலைவர் டாக்டர் ரேணுகா போகரே எழு திய ‘வஜ்ரசூசி துங்க்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாக்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மேலும் பேசியிருப்பதாவது: “சமத்துவ சமூகம் என்பது இந்திய கலாச் சாரத்தின் ஒரு பகுதி. தற்போது அது மறக்கப் பட்டு பல மோசமான விளைவுகளுக்கு வழி வகுத்துள்ளது. முன்பு வர்ணம் மற்றும் சாதி அமைப்புகளில் பாகுபாடு இருக்கவில்லை. அதன் பயன்பாடு மட்டுமே இருந்தது. இப்போது யாராவது சாதி, வர்ணம் குறித்து கேள்வி கேட்டால் அவை கடந்து போனவை. அவைகள் மறக்கப்பட வேண்டும் என்றே சொல்ல வேண்டும்.  பாகுபாடுகள் உள்ள அனைத்தையும் நாம் வைத்துக்கொள்ளாமல் வெளியேற்ற வேண்டும். உலகின் எல்லா இடங்களிலும் முன்னோர்கள் தவறு செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அந்தத் தவறு களை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக் கக்கூடாது. இப்படி தவறுகளை ஏற்றுக் கொள் வதால் நமது முன்னோர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று நாம் கருதினால், அது உண்மை யல்ல. ஏனெனில் உலகின் அனைத்துப் பகுதி களில் உள்ள முன்னோர்களும் தவறு செய்த வர்களாகவே இருக்கிறார்கள்.  இந்தியர்கள் மட்டும் விதிவிலக்கில்லை.” இவ்வாறு மோகன் பகவத் குறிப் பிட்டுள்ளார்.