புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை,ஜூன் 17- புதிதாக 1000 பேருந்துகளை வாங்கு வதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட் டிள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இயக்கும் மிகப் பழமை யான பேருந்துகளுக்குப் பதில் 1000 புதிய பேருந்துகளை வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத்துறைக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதியில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்க உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோ ணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும் புதிதாக வாங்கப்பட உள்ளன.
‘அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்’ மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
சென்னை,ஜூன் 17- தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம்வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரையில் நடத்தப்பட்டது. அப்போது 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப் பெண்கள் எடுத்து மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். இதில் நடிகர் விஜய் பேசுகையில், “வருங்கால இந்தியாவை சந்திப்பதில் சந்தோஷம். ‘உன்னில் என்னைக் காண் கிறேன்’ என்ற சொலவடை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது” என்றார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்து கிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன் என்றும் அவர் கூறினார். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து நிறைய படிக்க வேண்டும். ஓட்டுக்கு காசு கொடுக்கும் அரசிய லில் போட்டியிடும் நபர் குறித்து யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என்றும் அவர் கூறினார்.
சீமை கருவேல மரங்கள் விவகாரம்: நீதிமன்றம் அதிருப்தி
சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு மேலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்புக்கும் மேலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சீமை கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும் வளராமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.