கிருஷ்ணகிரி, செப்.25- தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி யில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இது வெறும் டெபிட் கார்டு இல்லை. பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு”என்றார். பெண்களின் முன்னேற்றம் மூன்று வழியில் தடுக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்றின் வழி யாக அவர்களின் முன்னேற்றம் தடுக்கப் பட்டுள்ளது என பெரியார் தெரிவித்துள்ளார். சிறு வயதில் தந்தையையும், திருமணம் ஆன பின்பு கணவரையும், வயதான பின் மகனையும் பெண்கள் நம்பி இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், டி.ராம சந்திரன், மேயர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.