தொலைத் தொடர்புத் துறையின் கீழ் அனைத்து மாநி லங்களும் அநேக மாக வழி உரிமைக் கொள்கைகளை சீரமைத்துவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நட ராஜன், தொலைத் தொடர்புத்துறையின் கீழ் வழி உரிமைக் கொள்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் யூனியன் பிர தேசங்களும் தங்கள் வழி உரிமைக் கொள்கைகளை (Right of Way Policies - ROW) சீரமைத்துவிட்டார்களா என்றும் ஆம் எனில்அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசிங் சௌகான், 2016 இந்திய தந்தி வழி உரிமை விதிகளின்கீழ் தொலைத் தொடர்புத் துறை ஒரு திருத்தத்தை வெளியிட்டி ருப்பதாகவும், அதன்படி, பதினேழு மாநி லங்கள் / யூனியன் பிரதேசங்கள், தங்க ளது வழியுரிமை கொள்கையை அறி வித்துள்ளன என்றும், மீதமுள்ள 19 மாநி லங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்த திருத்தத்தை, மாநில / யூனியன் பிரதேச வழி உரிமை கொள்கையில் இணைத்திட வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.