விருதுநகர், ஜூன் 26- விருதுநகர், மதுரை மற்றும் திண்டக்கல் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் விருதுநகர்-திண்டுக்கல் இடையே மெமு ரயிலை இயக்கிட வேண்டுமென 3 மாவட்டங் களைச் சேர்ந்த பொது மக்கள் ரயில்வே நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக் குடி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப் படும் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போ தும் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப் பாக விருதுநகர்-மதுரை-திண்டுக்கல் இடையே வந்து செல்லும் பயணிகள் மற்றும் எக்ஸ்பி ரஸ் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, முக்கியமான மூன்று நகரங்க ளுக்கு இடையே மெமு ரயில்கள் இயக்கப் பட்டால், பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். விருதுநகர்-திண்டுக்கல் இடையே 113 கி.மீ தூரமாகும். இப்பகுதியில் மெமு எனப்படும் மெயின் லைன் எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனும் ரயிலை காலை மற்றும் மாலை வேளை களில் இயக்குவதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பெருமளவு கட்டுப் படுத்த முடியும் எனவும், இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்க வும் வாய்ப்புள்ளது எனவும் சமூக ஆர்வலர் கள் தெரிவிக்கின்றனர். மேலும், மெமு ரயிலை இயக்கிட வேண்டு மென விருதுநகர், திருமங்கலம், திருப்பரங் குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல் பகுதி வியாபார, வர்த்தக பெருமக்களும், பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தென்னக ரயில்வே நிர்வாகமா னது, திண்டுக்கல்-மதுரை-விருதுநகர் இடையே மெமு ரயிலை இயக்கிட வேண்டு மென்பதே 3 மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.