states

இலங்கைச் சிறையில் உள்ள 64 மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம்

இராமநாதபுரம், நவ.3- இலங்கை சிறையில் உள்ள மீனவர் குடும்பங்களுக்கு  தாமதமின்றி நிவாரண உத விகளை வழங்க வேண்டும் என்று கடல் தொழிலாளர் சங்க இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கே.கணேசன், மாவட்டச் செய லாளர் எம்.கருணாநிதி மூர்த்தி ஆகியோர் அரசை வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும்  காலங்களில் அவர் கள் குடும்பத்திற்கு தமிழக அரசு  குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ.350 வழங்குகிறது. இதை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த தொகை மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர் களுக்கும், நலவாரியத்தில் பதிவு செய்யாத வர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.  அதுவும் சிறைப்படுத்தப்பட்ட இரண்டு தினங்களிலேயே குறைந்தது ரூ.5,000 முதற்கட்டமாக வழங்கவேண்டும். ஆனால், தொடர்ந்து பல வருடங்களாக இந்தத் தொகை மீனவர்கள் சிறையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி ஓரிரண்டு மாத ங்கள் ஆன பிறகும் கூட  வழங்கப்படுவது இல்லை. இது பாதிக்கப்பட்ட மீனவர்  குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற  அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகும். கடந்த மூன்று வாரங்களில்  64 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களது குடும்பங்கள்  வறுமையான சூழலில் உள்ளன.  குறிப்பாக தீபாவளி போன்ற திருவிழா நேரத்தில் தங்கள் வறுமையை வெளியில் சொல்ல இயலாமல் உள்ள னர். இந்தக் குடும்பங்களுக்கு  ரூ.5,000ம் ரேசன் மூலம் அரிசி, சீனி, கோதுமை, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.