states

எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்கத் தயார் - ரகுபதி

சென்னை,டிச.3-  ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி யில், “ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியி டாததில் எந்தத் தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். நாட்டிற்கே முன்மாதிரி சட்டத்தை  இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வரவுள்ளோம். அவசர  சட்டத்திற்கு அரசாணை வெளியிடாத தற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.