தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) பொதுச் செயலாளர் வி.ஹரிலால் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்குவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் ரயில்வே ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கான தொகையை போனசாக பெறுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ரயில்வேயில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18000. அதில் 78 நாள் போனஸ் என்றால் அவர் 46,159 ரூபாய் போனஸ் ஆக பெற வேண்டும். உயர் சம்பளம் பெறுபவர்கள் மேலும் உயர்ந்த தொகை போனஸ் ஆக பெற வேண்டும்.ஆனால் அனைவருக்கும் போனஸ் ஆக வழங்குவது 17,951 ரூபாய் மட்டும்தான். ஏனென்றால் போனஸ் கணக்கிட ரூபாய் 7000 எனும் உச்சவரம்பு உள்ளது. ஒரு ஊழியரின் மாத ஊதியம் எவ்வளவு ஆக இருந்தாலும் போனஸ் கணக்கிட அவருடைய மாத ஊதியம் 7000 ஆக கணக்கில் எடுக்கப்படுகிறது. எனவே அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் ஆக கிடைப்பது வெறும் ரூ.17,951 மட்டும் தான். ரூ.7000 எனும் உச்சவரம்பு தொடர்வதால் கடந்த எட்டு ஆண்டுகளாக அனைத்து ரயில்வே ஊழியர்களும் ரூ.17,951 மட்டும் தான் போனஸ் ஆக பெற்று வருகின்றனர் இந்த உண்மையை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் போனஸ் உச்சவரம்பை ரத்து செய்து உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும் என டிஆர்இயு போராடி வருகிறது.