மயிலாடுதுறை, ஜன.22- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளில் சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் பணி கடந்த சில தினங் களாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக் கான ஏக்கர் விளைநிலங்கள் அறுவடைக்கு தயாராகி இருப்பதால் விவசாயிகள் அறு வடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களில் தொழிலா ளர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், அதனை சமாளிக்கும் வகையில் அறுவடை இயந்திரங்களை தேடி அலைகின்றனர். ஒரே நேரத்தில் விவசாயிகள் நினைத்தவாறு அறுவடை இயந்திரங்கள் கிடைக்காத சூழ் நிலை உள்ளதால், அறுவடை பணி மந்த மாகவே நடக்கிறது. இந்நிலையில் விவ சாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டை களை உடனடியாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததன்படி, வருடந்தோறும் சம்பா நெற் பயிர் அறுவடை பணியின் போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டு நெல் கொள் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதி களில் மட்டும் தற்போது 86 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதலாக கொள்முதல் நிலை யங்கள் தேவைப்பட்டாலும் திறந்து கொள்ள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள மாதிர வேளூர் கிராமத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தலை மையேற்று, விவசாயிகளிடமிருந்து பழைய முறையான மரக்கால் மூலம் நெல்லை அளந்து கொள்முதல் செய்தார். விவசாயிகள் அனைவரும் முதன்முதலாக நெல் விற்பனை செய்யும் போது பழைய முறையிலான மரக்கால் மூலம் நெல் மணிகளை அளந்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.