புதுச்சேரியில், சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள சுப்ரமணிய பாரதியார் அரசுப் பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக என்.கே.சி மற்றும் வீரமாமுனிவர் என வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் அப்பள்ளி மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. அங்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவிகள் நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன், அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.