states

நாடு முழுவதும் தனியார் நியாய விலைக் கடை அறிமுகப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசு!

புதுதில்லி, மார்ச் 9- நாடு முழுவதும் தனியார் நியாய விலைக்  கடைகளை (Fair Price Shop- FPS)அறி முகப்படுத்த நரேந்திர மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்தி ருப்பது தெரியவந்துள்ளது.  மாவட்டத்திற்கு 75 என்ற எண்ணிக்கை யில் துவங்கப்படவுள்ள இந்த தனியார் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத் திட்  டத்தின் கீழ் வழங்கப்படும் இலவசப் பொருட்  கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று மோடி அரசு கூறியிருக்கிறது. நியாய விலைக் கடைகளின் செயல்பாடு களை மாற்றியமைப்பது தொடர்பாக நடை பெற்ற தேசிய மாநாடு ஒன்றில், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை (Department of  Food & Public Distribution - DFPD) செய லாளர் சஞ்சீவ் சோப்ரா, அண்மையில் கலந்து  கொண்டு பேசினார். அப்போது முதன்முத லாக இத்தகவலை தெரிவித்த அவர், இது தொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டி ருந்தார். இந்நிலையில்தான் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்த விவ ரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘’ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை பரவ லாக்கம் செய்யும் வகையில் ரேசன் விநியோ கத் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்  பளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தில்லி ஐஐடி மற்றும் உலக உணவுத் திட்ட (world food program) குழுவினர், நாடு  முழுவதும் விரிவான ஆய்வுகளை மேற் கொண்டனர். இதனடிப்படையில், நியாய விலைக்கடைத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் fair price shop என்ற பெயரில் டீலர்கள் நியமனம் செய்யப்பட  உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநில அரசு கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தத்தமது மாநிலம் மற்றும் பிரதேசத்தில் உள்ள ஒவ்  வொரு மாவட்டத்திற்கும் 75 நியாய விலைக்  கடைகளைத் (Fair Price Shop) திறக்க வேண்டும்.

இந்த டீலர் கடைகளில் அனைத்து வகை யான மளிகைப்பொருட்கள் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அனைத்து விதமான உப பொருட்களையும் (Fast-Moving Consumer Goods - FMCG) விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால், இவை வெளிச்சந்தை விலைக்கு  விற்பனை செய்யப்பட அனுமதிக்கக் கூடாது. அரசின் நியாய விலைக்கடை விலையில் மட்டுமே பொருட்கள் விற்கப்பட வேண்டும்.  இந்த தனியார் நியாய விலைக் கடைக்கும், பொது விநியோகத் திட்டத்தின் கீழான நியாய  விலைக்கடைக்கும் சம்பந்தம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் எந்தவிதமான இலவசப் பொருளும் இந்த தனியார் நியாய விலைக் கடையில் வழங்  கப்பட மாட்டாது. அதே நேரம் தனியார் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்றாலும் குடும்ப அட்டையை எடுத்துச் சென்றுதான் பொருட்களை வாங்க முடி யும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிர தேச அரசுகள் தங்களது மாவட்டங்களில் 75  கடைகள் திறக்கத் தேவையான இட வசதி களை செய்து தர வேண்டும். தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேசன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்ப தற்கான அறைகள், சிசிடிவி வசதிகள், டாய்  லெட் வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம்  சங்கள் இருத்தல் வேண்டும். ரேசன் திட்டத்தை பெரும் முன்னேற்ற திட்டமாகக் கொண்டு செல்ல பொதுமக்க ளின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும் என்ற  அடிப்படையில் மட்டுமே இந்த டீலர்கள் அடங்கிய தனியார் நியாய விலைக்கடைத் திட்டம் முன்னோடித் திட்டமாக கொண்டு வரப்படுகிறது. இந்த தனியார் நியாய விலைக்  கடை உரிமையாளர்கள், ‘நியாய விலைக் கடை டீலர்கள்’ (Fair Price Shop Dealer)  என்ற பெயரில் அழைக்கப்படுவார்கள். இந்தத் தொழில் மூலம் அவர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபமீட்டுவார்கள்’’ என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் 4 கோடியே 99 லட்சம்  நியாய விலைக் கடைகள் இயங்கி வரு கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 35 ஆயி ரத்து 323 நியாய விலைக் கடைகள் இயங்கி  வருகின்றன. இந்த கடைகள் வாயிலாக பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அரிசி,  கோதுமை, சீனி, பருப்பு, உளுந்து, மண்  ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப் படுகின்றன. தமிழ்நாடு போன்ற சில மாநி லங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாகவே வழங்கப்படுகிறது. மற்றப் பொருட்கள் குறைந்த விலையில் விற்  பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்கள் இலவச மற்றும் நியாய விலைப் பொருள்களை பெற்றுப் பயனடைந்து வரு கின்றனர். ஆனால், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளையும், ‘ஒரே நாடு, ஒரே ரேசன்  கார்டு, ஒரே ரேசன் திட்டம்’ என்ற திட் டத்தையும் பரவலாக்குகிறோம் என்ற பெய ரில் தனியார் நியாய விலைக் கடைகளை (Fair Price Shop- FPS) திறக்க மோடி அரசு  முடிவு செய்துள்ளது. குஜராத் போன்ற மாநி லங்களில் ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள தனியார் நியாய விலைக்கடைகளை முன் மாதிரியாக கொண்டு, ஒன்றிய அரசு இந்த  திட்டத்தை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.