states

img

கல்வி வளாகத்தில் மத நிகழ்ச்சியா? போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

சென்னை, நவ.13 - கல்வி வளாகத்தில் மத நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாண வர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட இளைய சங்கா ராச்சாரியார் விதுஷேகரபாரதி பங்கேற்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று (நவ.12) சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. மீனாட்சி கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் குரு வந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாணவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டி ருந்தது. பகுத்தறிவு வளர்க்க வேண்டிய கல்வி வளாகங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த  அரசு எப்படி அனுமதி அளித்தது? கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டி ருந்தால் விசாரணை நடத்தி அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் தலைமையில் வந்த மாண வர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் தடுத்தனர். மாணவர்களை கீழே தள்ளி குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று  வேனில் ஏற்றிச்சென்றனர்.