states

நெல் கொள்முதலில் தனியார்: விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

சென்னை,ஜூலை 8- நெல் கொள்முதல் செய்வதில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி. சண்முகம் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் நெல் கொள்முதல் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்வதில் தாமதம், கொள்முதல் செய்த நெல்லை பாது காத்து வைக்க போதுமான கிடங்கு வசதி செய்யப்படாமல் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டை கள் வீணாகின்றன. மூட்டைக்கு ரூ.40  முதல் 50 வரை கட்டாய வசூல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்தக் குறைகள் அனைத் தும் சரி செய்யப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

முறைகேடுக்கு வழிகோலும்! இந்த நிலையில், நெல் கொள் முதல் செய்வதை அரசு கைவிட்டு தனி யாருக்கு கொடுக்கவும், சில மாவட்ட ங்களில் கொள்முதுல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொரு ப்பை தனியாரிடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது. இது பிரச்சனை களுக்கு இது சரியான தீர்வாக அமை யாது. மாறாக, முறைகேடுகள் மேலும் அதிகரிக்கவும், காலப்போக்கில் அரசு கொள்முதல் என்பது கைவிடப்பட்டு விவசாயிகள் முழுக்க தனியாரை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. கொள்முதல் செய்வதற்கான பணம், அதற்கான சாக்கு உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தையும் அரசு கொடுக்கும். திறந்த வெளியில் அடுக்க ப்படும் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்கு மட்டும் தனியார் பொருப்பு என்பது சரியல்ல என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கொள்முதல் செய்யப்படும் அனைத்து நெல்மூட்டைகளையும் பாது காப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்குகளை அமைப்பதும், நவீன அரிசி ஆலைகளை அரசே நிறுவி உடனு க்குடன் அரிசி ஆக்குவதற்குரிய நட வடிக்கை எடுப்பது தான் நிரந்தர தீர்வாக அமையும். ஆகவே, அரசு நெல் கொள்முதலில் தனியாரை ஈடுப டுத்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.