தாய்ப்பால் தானம்
கோவை, ஜன. 24 - கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா (27) என்பவர் கடந்த 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகனுக்கு தாயான ஸ்ரீவித்யாவின் தாய்ப் பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
தில்லியில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தலைநகர் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண ரப்பட்டுள்ளது. தில்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 விநாடிகள் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தா னிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக தில்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆம் ஆத்மி வென்றும் தில்லிக்கு மேயர் ஆக முடியாத நிலை!
தில்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி, மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை வென்று தனிப் பெரும் பான்மை பெற்றது. பாஜவுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. எனினும், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி மேயரைத் தேர்ந்தெடுக்கும் நாளன்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி, மேயர் தேர்தலை பாஜக ஒத்திவைக்கச் செய்தது. ஜனவரி 24 அன்று மேயர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் செவ்வாயன்று ஆத்திரமூட்டலை ஏற்படுத்தி, மேயர் தேர்தலை ஒத்திவைக்கச் செய்துள்ளது.
ராகுல் யாத்திரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன்!
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில், செவ்வாய்க்கிழமையன்று தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமை யாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெருமாள் முருகன், ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் (ஜம்மு) நானும் காலச்சுவடு கண்ணனும் இணைந்து கொண்டோம். ‘சாதியும் நானும்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பிரதியை ராகுல் காந்திக்கு பரிசாக வழங்கினேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தில்லியில் டிரோன்கள், ஏர் பலூன்கள் பறக்க தடை!
ஜனவரி 26 - குடியரசுத் தினத்தையொட்டி, பிப்ரவரி 15-ஆம் தேதிவரை டிரோன்கள், பாரா கிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகிய வற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, யாராவது இந்த பொருட்களை பறக்கவிட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
லண்டனில் கர்நாடக கொடியை ஏந்திய மாணவர்
லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பட்டம் பெற வந்த கர்நாட கத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர், பட்டத்தைப் பெற்றுக்கொண்டு, மூத்த ஆசிரியர்களு டன் கைகுலுக்கிய பின்னர், கர்நாடக மாநிலக் கொடியை தனது கைகளில் பிடித்து பறக்க விட்டப்படி சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் அவர் பதிவேற்றி யுள்ளார். மாணவர் அதிஷ், இந்திய தேசியக் கொடிக்குப் பதில், கர்நாடக மாநிலக் கொடியை ஏந்தியது விவாதங்களை கிளப்பியுள்ளது.
இளையராஜா வருகைப்பதிவு பூஜ்ஜியம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 13 அமர்வுகள் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட நியமன உறுப்பினரான இளையராஜா கலந்து கொள்ளவில்லை. குளிர்கால கூட்டத் தொடரில் இளையராஜாவின் வருகைப்பதிவு பூஜ்ஜியம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், இளையராஜாவோடு சேர்த்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட பி.டி. உஷா 13 அமர்வுகளும் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். ஒரு விவாதத்தில் பங்கேற்றுள்ளார். வீரேந்தர் ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் இரண்டு நாட்களும் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்று உள்ளனர்.
சட்டப்புத்தகங்களை தமிழில் கொண்டுவர வேண்டும்: நீதிபதிகள் கருத்து
மதுரை,ஜன.24- தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்த ரவை நடைமுறைப்படுத்தாத தமிழ் ஆட்சி மொழி -பண்பாட்டு துறை செயலா ளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடை கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் 1982 ஆம் ஆண்டு அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த, நட வடிக்கை எடுக்க தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாள ருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல மாதங்கள் கடந்த நிலை யிலும், தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்தவில்லை. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தாத தமிழ் ஆட்சி மொழி- பண்பாட்டு துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு செவ்வாயன்று நடை பெற்றது. அப்போது அரசுத் தரப்பில் வாதிடு கையில் , அரசு அலுவலகங்களின் பெயர் பலகை, தமிழக அரசின் அர சாணைப்படி உரிய முறையில் கடை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ,தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகை யை தமிழக அரசின் அரசாணைப்படி தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வைக்கப் படுவதில்லை. தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகை யில் , தமிழ் வளர்ச்சிக்கு அனைத்துத் துறையினரும் உண்மையிலேயே கடுமையாக பாடுபட வேண்டும் . சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாட புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப் படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழக அரசாணையின்படி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகை வைத்துள்ள நிறு வனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டையே உலுக்கிய தில்லி ஷ்ரத்தா கொலை வழக்கு 6,629 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
புதுதில்லி, ஜன.24- கடந்த ஆண்டு மே மாதம் காதல் மனைவியான ஷ்ரத்தா வாக்கரை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டுப்பகுதியில் வீசிய கொடூர சம்பவத்தில் கணவன் அப்தாப் கைது செய்யப்பட்டார். அப்தாப்பிற்கு எதிராக ஆதாரங்களை சேகரித்த போலீசார், டிஎன்ஏ சோதனையையும், அப்தாப்பிற்கு நார்கோ பரிசோதனையையும் மேற்கொண்டனர். இந்நிலையில் டிஎன்ஏ மற்றும் நார்கோ பரிசோதனை தகவல்களையும், 100 சாட்சியங்கள் மற்றும் தடவியல் நிபுணர்களின் ஆதாரங்களை யும் சேர்த்து அப்தாபிற்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிக்கை யை தில்லி காவல்துறை தாக்கல் செய்தது. தடயங்களை மறைத்த தாக அப்தாப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம்: இந்திய தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:,ஜன.24- கடந்த அக்டோபர் 2 காந்தி ெஜயந்தி தினத்தன்று, தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் திட்ட மிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்த னைகளுக்குட்பட்டு பேரணி நடத்திக் கொள்ள உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாயன்று (ஜன.24) விசார ணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “நீதிமன்ற உத்த ரவை தொடர்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டம் ஒழுங்கை பாது காப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்குத்தான் அனு மதியளிக்கப்பட்டதே தவிர அணி வகுப்புக்கு அல்ல. வால்பாறை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலத்திற்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடு களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்ப வங்கள், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைக்கு பின்னரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத் துறை அறிக்கை அடிப்படையில்தான் காவல் துறை யினர் செயல்பட்டனர். எல்லா மத நம்பிக் கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புகிறது என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்த னர்.
இயக்குநர் ராமதாஸ் காலமானார்
சென்னை,ஜன.24- திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், உடல்நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக் கிறார்.. பி.எஸ். நிவாஸ் இயக்கத்தில் சுமன், சுமலதா நடித்து 1981இல் வெளிவந்த ‘எனக்காகக் காத்திரு’ படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ராமதாஸ் அறிமுக மானார். இதற்குப் பிறகு இயக்குநர் மணிவண்ணனிடமும் மதர்லாண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பியிடமும் சில காலம் பணியாற்றினார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் ஆகிய படங்களை இயக்கினார். 1999இல் 14 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கிய ‘சுயம்வரம்’ படத்திலும் ராமதாஸ் இயக்குநராக இருந்தார். காக்கிச்சட்டை,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அவர் நடித்தும் உள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை கே.கே. நகரில் நடைபெற்றது.
ரூ.6 கோடி தங்க நகைகள் பறிமுதல்
சென்னையிலுள்ள சில நகைக்கடைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. காவல்துறையினரின் சோதனையின்போது, இப்படி ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவல்துறையின் வாகன சோதனையின்போது ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் சிக்கியது.
ஆயுதங்களைக் கொட்டுங்கள் ஜெலன்ஸ்கி அலறல்
பெர்லின், ஜன.24- ரஷ்யாவிடமிருந்து பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், ஏராளமான அளவில் ஆயுதங்களைத் தாருங்கள் என்று மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கு வரும் என்ற நம்பிக்கையில் ரஷ்யாவை எதிர்த்து நிற்க உக்ரைன் முடிவெடுத்தது. ஆனால், ஆயுதங்களை விற்பதில்தான் இந்த நாடுகள் குறியாக இருக்கின்றன. எந்நெந்த பகுதிகளை உக்ரைனின் பிடியில் இருந்து விடுவிக்க ரஷ்யா முடிவெடுத்திருந்ததோ அந்தப் பகுதிகளில் முன்னேறி வருகிறது. உக்ரைன் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் ராம்ஸ்டின் விமானப்படைத்தளத்தில் சில நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் கலந்து கொண்ட ஜெலன்ஸ்கி, “நாம் விரைவுபடுத்த வேண்டியுள்ளது. நமது விமானப்படை, ஆயுதந்தாங்கிய வாகனங்கள் மற்றும் பீரங்கிகளைப் போன்று நேரமும் நமது ஆயுதமாக மாற வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “தற்போது நிகழ்ந்து வரும் மோதலில் மறைமுகமாகவும், பல சமயங்களில் நேரடியாகவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியின் பங்களிப்பு இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்குவதால் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. உக்ரைனுக்கும், உக்ரைன் மக்களுக்கும் கூடுதல் துயரத்தைத்தான் அது தரும்” என்றார்.
தீக்கதிர் விரைவு செய்திகள்
குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த மாதம் பிரான்ஸ் - தில்லி ஏர் இந்தியா விமானத்தில் 2 பேர் புகைப்பிடித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தி யாவுக்கு மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஷாருக்கா னின் “பதான்” திரைப் பட போஸ்டர்கள் கிழிக்க ப்பட்ட விவகாரத்தில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் யாரையும் இதுவரை விசாரிக்கவில்லை, கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன் னாள் முதல்வர் ஜெய லலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் இருந்து பறிமுதல் செய் யப்பட்ட பொருட்களை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அரசு உடன டியாக ஏலம் விட நட வடிக்கை எடுக்க வேண் டும் என பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11,344 சேலைகள், 750 செருப்புகள், 1040 வீடி யோ கேசட்டுகள் போயஸ் கார்டனில் இருந்து கைப்பற்றப்பட்டன.
பீகார் மாநிலம் சிவன் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்து ள்ளனர். 14பேரின் நிலை மை கவலைக்கிடமாக உள்ளது. 6 பேர் கண்பார்வை இழந்துள்ள னர்.
உலகச் செய்திகள்
மே 14 ஆம் தேதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று துர்க்கியேயின் ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். ஜூன் 18 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படவிருக்கிறது. பருவகாலத்தில் ஏற்படும் மாற்றங்களால்தான் தேர்தல் முன்கூட்டியே நடக்கப்போவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, பள்ளிக்கூடத் தேர்வு களும் இருக்கின்றன. அதனால்தான் இத்தகைய முடிவை எடுத்த தாக எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.
காச நோய் இருப்பதைக் கண்டுபிடிக்க எலிகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஆய்வு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் எலிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். காச நோயைக் கண்டுபிடிப்பது குறித்த ஆய்வு வெற்றி பெற்றால் நோய் கண்டுபிடிக்கும் பணியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டில் போடப்பட்ட அணுசக்தி உடன்பாட்டைப் புதுப்பிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார். இப்போதைக்கு நேரடியாக அமெரிக்காவுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிய அவர், மற்ற நாடு களின் கருத்துக்களையும், எந்த அளவுக்கு அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்பதையும் அறியும் பணிகள் நடக்கின்றன என்றும் கனானி குறிப்பிட்டார்.