பட்டினி கிடக்கும் மக்கள் கணக்கெடுப்பில் இந்தியாவை விட மோசமாக உள்ளது ஆப்கானிஸ்தான் மட்டும்தான். இதற்கும் அரசின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லையா?
திருவள்ளூர், பிப்.22- உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்கி னால்தான் வறுமையை ஒழிக்க முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திரு வள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிப். 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான பிப். 21 அன்று பொன்னேரி ஹரிஹரன் பஜாரில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சமர் களுக்கு என ஒதுக்கப்பட்ட ஆயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்கள், படிப்படியாக பறிக்கப்பட்டு தற்போது வேறு சமூக மக்க ளிடம் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அபக ரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பறிமுதல் செய்கிற போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு அந்த நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். 1960 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் வருகிறபோது, சட்டத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக, ஆசாமி பெயரில் இருந்த நிலங்களை, சாமி பெயரில் எழுதி வைத்து விட்டு, சாமி பெயரில் அறக்கட்டளை அமைத்து அந்த நிலங்களை வசதி படைத்தவர்களே அனு பவித்து வருகின்றனர்.
நிலம் வழங்குக!
கோயில் நிலத்திற்கு உச்சவரம்பு சட்டம் பொருந்தாது என்பதால், சட்டத்தை ஏமாற்று கிறார்கள். கடவுளை வணங்குவது அவரவர் விருப்பம். ஆனால் கோயில்களுக்கு அவ்வ ளவு நிலம் எதற்கு? கோயில் மடங்களுக்கு, அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை எடுத்து, நிலமற்ற, ஏழைகளுக்கு வழங்க வேண்டும். நிலம், வீடு, மனைப்பட்டா இல்லாத வருக்கு கோயில் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அரசிற்கு என்ன தடை?
அண்ணாமலையின் உளறல்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து அறநிலையத்துறையை அகற்றுவோம் என்கிறார். அகற்றிய பிறகு நிலங்களை முற்றாக அபகரிக்கிற வேலையைச் செய்வார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் தான் அதிக அளவில் கார்ப்பரேட் நிறுவ னங்கள் வந்துள்ளன. கார்ப்பரேட் முதலாளி கள் வளர்வதினால் நாட்டில் வறுமை ஒழியாது. பெரிய, பெரிய நிறுவனங்கள் உருவாவதால் வறுமை ஒழியாது, உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்குகிற நிலை வந்தால் தான், இங்கு வறுமையை ஒழிக்க முடியும். தமிழ்நாடு அரசு கோவில் நிலங்களில் குடியிருக்கிற மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். சாகுபடி செய் கிற நிலங்களையும் அவர்களுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உ.வாசுகி
கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி பேசுகையில், “மோடியை கம்யூ னிஸ்டுகள் விமர்சனம் செய்துகொண்டே இருப்பதாக சிலர் கூறுகின்றனர். பிரதமர் மோடி வாயைத் திறந்தால் அதானி, அம்பானி நலன் பற்றியே பேசுகிறார். இதனால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாயைத் திறந்தால் மோடியின் மோசமான பொருளா தாரக் கொள்கைகளால் எப்படி மக்கள் பாதிக்கின்றனர் என்று சொல்லுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநி லங்களிலும் உள்ள மக்கள் பல்வேறு சிர மங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். இதற்கு அரசின் கொள்கைகள் தான் காரணமாக உள்ளன. உலக அளவில் பசியால் வாடுகிற மக்கள் அதிகம் இருக்கிற நாடுகளின் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுக்கான பட்டி யல் வெளியிடுகிற போது, 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் இருப்பதாக பட்டி யல் சொல்கிறது. இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் 106 நாடுகள் உள்ளன. பட்டினி கிடக்கும் மக்கள் கணக்கெடுப் பில் இந்தியாவை விட மோசமாக உள்ளது ஆப்கானிஸ்தான் மட்டும்தான். இதற்கும் அர சின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
மூடப்படும் தொழிற்சாலைகள்
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள் ளன. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழ வரம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதி களில் படிப்பை முடித்த இளைஞர்கள் வேலை தேடி ஸ்ரீசிட்டி செல்ல வேண்டும், இல்லை யென்றால் ஸ்ரீபெரும்புதூர், சென்னை போன்ற நகரங்களுக்கு தான் அதுவும் மிக குறைந்த ஊதியத்தில் செல்கின்ற அவல நிலை உள் ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த வேலைவாய்ப்பு இப்போது கிடைக்க வில்லை. கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஏராள மான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இழந்துள்ளனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பம், பன்னாட்டு நிறுவனங்களால் இங்குள்ள சிறு,குறு தொழில்கள் அழிந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியால் தொழில் அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு எதிராக மக்களும், தொழிலாளர்களும் இணைந்து போராட வேண்டும்” என்றார்.
நிதியளிப்பு
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொது மக்களிடம் திரட்டப்பட்ட ரூ.10 லட்சத்தை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செல்வம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் பல்வேறு அமைப்புகளிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.
புத்தகம் வெளியீடு
முன்னதாக பொதுக்கூட்டம் மேடையில் “சிவப்பு புத்தக” தினத்தை முன்னிட்டு மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய பாரதி புத்தகா லயம் வெளியிட்ட “மதத்தைப் பற்றி” என்ற நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் வெளியிட வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன் பெற்றுக்கொண்டார். இதில் பாரதி புத்தகாலய நிர்வாகி இரா.நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாநிலக் குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், இ.மோகனா ஆகி யோர் பேசினர். பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் வரவேற்றார். வழக்கறிஞர் ஆர்.காள மேகம் நன்றி கூறினார்.முன்னதாக லயோலோ கல்லூரி மாணவர்களின் மாற்று ஊடகத்திற் கான கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.