2024-ஆம் ஆண்டு இப்போது வரை பதிவு செய் யப்பட்ட அதிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியாவில் கோடை காலம் என்பது ஏப்ரல் முதல் ஜுன் வரை என்று கணித்துள்ளது. இது வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் இந்தி யாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு வடமேற்கு இந்தியாவின் சமவெளி பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மனிதர்களின் உடல்நிலை இயல்பாக 98.6 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்த உடல் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் போகும்போது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படுகிறது. வெயில் காலங்களில் நிலவும் வறண்ட வானி லை காரணமாக சில நேரங்களில் இயல்பாக வரும் வியர்வை வராது. மேலும் உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பும் செயல்படாமல் போனால் உடலின் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் இருக்கும்போது மிக எளிதாக இந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அதேபோல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கும் நீர்ச் சத்து வற்றி இப்பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணை நோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடும்போது இந்த கடும் வெப்பத்திற்கு பெண்கள் கணிசமாக பாதிக்கப்படுகின்றனர். 2005 முதல் இந்தியாவில் பெண்களிடையே வெப்பம் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகின்றன என்று ஒரு ஆய்வின் பகுப்பாய்வு கூறுகிறது. இந்திய வானிலை ஆய்வுத்துறை பதிவு செய்த 1990 – 2019 வரையிலான இந்தியாவின் தினசரி வெப்பநிலை தரவு (சராசரி அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் ) என்ற வகையில் ஆண்கள் இறப்புகளில் படிப்படியான சரிவை காட்டியுள்ளது. அதேசமயம் பெண்களுக்கு இது 2005 லிருந்து படிப்படி யான அதிகரிப்பை காட்டியுள்ளது. 2000 முதல் 2010 வரையிலான ஆண்கள் இறப்பு விகிதங்கள் 23.11 சதவிகிதம் இருந்தது. பின்பு இது 18.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெண்களை பொறுத்தவரையில் 4.63 சதவிகிதத்திலிருந்து 9.84 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உலகெங்கும் இதே நிலைதான் என்பதை குளோபல் நார்த் வானிலை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். ‘எல் நினோ’ ஒரு இயற்கையான மற்றும் சுழற்சி என்றாலும் அதன் விளைவுகளை நாம் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் குறைக்க முடியும். எல் நினோவின் வடி வங்கள் மற்றும் வழிமுறைகளை புரிந்துகொள்வதன் மூலம் அதன் பாதகமான விளைவுகளை குறைப்பதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும். எல் நினோ நிகழ்வால் வெப்பநிலையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டிருப்பதாக தற்போதைய விஞ்ஞா னிகள் கூறுகின்றனர்.
எல் நினோ என்பது ஒரு சிக்கலான கால நிலை அமைப்பு. இது உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதில் குறிப்பி டத்தக்க பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற னர். இந்த நிலையில்தான் அதன் தாக்கம் உலகம் முழு வதும் உணரப்படுவதாக சொல்லப்படுகிறது. புவியியல் மற்றும் தட்ப வெப்ப நிலைகளால் இந்தியா போன்ற நாடுகள் பிரத்யேகமான சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளன. எப்போதுமே எல் நினோ முடியப்போ கும் வருடத்தின் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது 2016-ல் வெப்பம் அதிகமாக இருந்தது. குறிப்பாக எல் நினோ மறைய ஆரம்பிக்கும் போது தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே போல இந்த கோடை காலத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை குறைவாக இருக்கும் என்றும் இது வெப்பத்தின் தாக்கத் தை அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்நிலையில் நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தலும், விவசாய நடைமுறைகளை சரிசெய்தலும், கால நிலை மாறுபாட்டிற்கு தாங்கும் தன்மையை மேம்படுத்துவதும் அவசி யமாகும். இத்தகைய கொள்கைகளை உருவாக்குவதன் மூலம்தான் மக்களைப் பாதுகாக்க முடியும்.