states

கலாஷேத்ரா மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை

சென்னை, எப்.2  சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கவின்கலை கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து முன்னாள் இன்னாள் மாணவி களிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள். கேரள மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி  பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019-ம் ஆண்டு பாலியல் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் பேராசிரியர் இன்னும் கைது  செய்யப்படவில்லை. இது தொடர்பாக  காவல்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவை யான ஆதாரங்களை திரட்டி வரு கிறோம். அதன்பின்னரே கலா ஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடு த்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்’ என்றும் தெரிவித்தனர்.  

கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றி யும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தக வல்கள் தெரியவரும் என்றும் தெரி வித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த 5 முன்னாள் மாணவிகளிடம் விசா ரணை நடத்த தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்துள் ளனர். சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற தனிப்படை போலீசார் கேரள  மாணவிகள் 5 பேரிடமும் ஞாயிறன்று  விசாரணை நடத்தினர். அப்போது கலாஷேத்ராவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாண விகள் பரபரப்பான தகவல்களை தெரிவித்து உள்ளனர். இதனை சென்னை தனிப்படை போலீ சார் வாக்குமூலமாக பதிவு செய்துள் ளனர். கேரள மாணவிகளிடம் நடத்தப் பட்ட விசாரணையில் பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்பாகவும் பல் வேறு தகவல்களை திரட்டிஇருப்ப தாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் சென்னை திரும்பும் போலீசார் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கலாஷேத்ரா விவகாரத்தில் அடுத்தக்கட்ட நட வடிக்கைக்கு தயாராகி வரு கிறார்கள். இதற்கிடையே குற்றச் சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசிரி யர் ஹரிபத்மன் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல்கள் வெளி யாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர். ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதையடுத்து பேரா சிரியர் ஹரி பத்மன் மீதான பிடி இறுகி உள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட லாம் என்கிற சூழல் நிலவுகிறது.