திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி களில் மாணவர்களுக்கு காலை சிற்று ண்டித் திட்டத்தில் குழந்தைகள் உணவு சாப்பிடுவதற்கு தேவையான தட்டு, டம்ளர் மற்றும் சமையல் பாத்திரங் களை அந்தந்த ஊராட்சிமன்றத் தலை வர்கள் “ஏற்பாடு” செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டிருக்கிறார். ஏற்கெனவே போதிய நிதியாதாரம் இல்லாமல் தவிக்கும் ஊராட்சி நிர்வா கத்தில் யாரை பிடித்து எப்படி இந்த பொருட்களை வாங்கித் தருவது என்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் திண்டாடி வருகின்றனர். தமிழக அரசு, பள்ளிகளில் குழந்தை களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 76 பள்ளிகளில் 1429 மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களி லும் கிராமங்களிலும், நகரங்களிலும் காலை சிற்றுண்டித் திட்டத்தை நடை முறைப்படுத்தவும் அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஊராட்சிவாரியாக எத்த னைப் பள்ளிகள், எத்தனை மாண வர்கள் பயனடைவார்கள் என்ற விப ரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதில் பள்ளி குழந்தைகள் சாப்பி டுவதற்கான தட்டு, டம்ளர் மற்றும் சமை யல் பாத்திரங்கள், டிரங்க் பெட்டி ஆகிய வற்றை அந்தந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மூலம் ஏற்பாடு செய்து வாங்கிக் கொள்ளும்படி மாவட்ட நிர்வா கம் வழிகாட்டியுள்ளது. இதற்கென தனி யாக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்பட வில்லை. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை ஒட்டி, கல்வித்துறை அதிகாரிகளும் அந்தந்த பள்ளி தலை மை ஆசிரியர்களிடம் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களைத் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளி கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்றத்தாழ்வான நிலையில் இருந்தா லும் சிறிய ஊராட்சிகளில் இருக்கும் பள்ளிகளில் கூட குறைந்தபட்சம் 200 முதல் 250 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு தட்டு, டம்ளர் மட்டு மின்றி இதர சமையல் பாத்திரங்கள், உப கரணங்களும் தேவை என பள்ளி தலை மை ஆசிரியர்கள் அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளனர். இதற்கு குறைந்தபட்சம் கணக்கிட்டாலும் ரூ.1லட்சம் வரை தேவைப்படும் என்று ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூறினர். ஊராட்சிமன்றங்களில் போதிய வருவாய் இல்லாமல், அரசு வழங்கும் மானியம், நிதி ஒதுக்கீடும் தேவைக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்று வதற்கு ஊராட்சிகள் சிரமப்பட்டு வரு கின்றன. வழக்கமாகவே சின்னச் சின்ன வேலைகளைச் செய்வதற்கு உள்ளூ ரில் இருக்கும் பிரமுகர்கள், வசதி படைத் தவர்களிடம் நன்கொடை பெற்று, அல்லது அவர்களிடமே வேலையை செய்து தருமாறு கேட்டு நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் காலை சிற்று ண்டித் திட்டத்தில் தேவையான உப கரணங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கா மல் ஊராட்சித் தலைவர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
பொங்கலூர் ஒன்றியம் தொங்குட்டி பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பிரியா நடராஜன் கூறுகையில், வெளியே சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். என்ன செய்வது? பள்ளி களில் படிப்பது நமது குழந்தைகளாக உள்ளனர். அவர்களுக்காக எப்படி யாவது தட்டு, டம்ளர் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. இது பற்றி முறை யாக கூட்டம் நடத்திக் கூட எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றார். காட்டூர் ஊராட்சிமன்றத் தலைவர் சதீஷ் கூறும்போது, எங்கள் ஊராட்சி யில் நிதியும் குறைவு, அதேசமயம் பள்ளி குழந்தைகள் என்பதற்காக எப்படி யாவது நாங்கள் தட்டு, டம்ளர் வாங்கித் தரவேண்டியிருக்கிறது. பல முக்கிய பிரமுகர்களிடம் உதவி செய்யும்படி கேட்டிருக்கிறேன் என்றார். மாதப்பூர் ஊராட்சித் தலைவர் அசோக்குமார் கூறும்போது, திட்டத்தை அரசு அறிவிக்கிறது. அதற்கான பணத்தை ஒதுக்க வேண்டாமா? ஏற்கெ னவே பஞ்சாயத்தில் சின்னச்சின்ன விச யங்களுக்கு நாங்கள் ஸ்பான்சர் வாங்கி செய்கிறோம். நாங்கள் மட்டு மல்ல, பள்ளி ஆசிரியர்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். அவர் களிடம் இது போன்ற வேலைகளை செய்யச் சொல்லும்போது அழாத குறை யாக சிரமப்படுகின்றனர். பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். மக்களுக்கு சேவை செய்யலாம் என இந்த பதவிக்கு வந்தால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் ராஜினாமா செய்து விட்டுப் போகலாமா என்று நினைக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று கொட்டித் தீர்த்தார்.
இடுவாய் ஊராட்சிமன்றத் தலை வர் கே.கணேசனிடம் கேட்டபோதும் மேற்சொன்ன தலைவர்கள் சொன்ன தை உறுதிப்படுத்தினார். ஊராட்சித் தலைவர்கள் தட்டு, டம்ளர் வாங்கித் தர வேண்டும் என்று சொன்னதோடு அந்த தட்டுகள் 2 இன்ச் உயரம், அதன் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மூன்று பள்ளிகள் உள் ளன. இப்பள்ளிகளுக்கு எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறினார். பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பான திட்டமாக இருந்தா லும், அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி செயல்படுத்த தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே நிதி நெருக்கடி, மக்களின் அதிக எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு இடையே சிக்கித் தவித்து வரும் ஊரா ட்சித் தலைவர்கள் மீது பொறுப்பைத் திணிப்பது நியாயமல்ல என்று ஊரா ட்சித் தலைவர்கள் பலரும் ஒருமன தாகக் கூறினர். கவனிக்குமா தமிழக அரசு? சீர்செய்வாரா தமிழகமுதல்வர்?