states

‘தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 விழுக்காடு குறைந்துள்ளது’

சென்னை, மே 26 - பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழிற்பேட்டை யில் உள்ள எச்.இ.சி.எஸ். கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். வல்லம் - வடகல் சிப்காட்டில் உற்பத்தி அலகுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் யு.எஸ் கன்சுலேட்டிங் பொருளாதார நிபுணர் டஸ்டின் பிக்கல் கலந்து கொண்டு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது என்றும், தண்ணீரில் கழிவுகளை கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். சாயப் பட்டறை கழிவுநீரை கலந்தால் சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கேள்விக்கு, தற்போது முன்பை விட 20 விழுக்காடு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து உள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு பிளாஸ்டிக் வருவ தாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது  மக்கள் இயக்கமாக மாற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக  174க்கும் மேற்பட்ட நிறுவனங்களை மூடியுள்ளதாகவும், இனி அது போன்ற  நிறுவனங்கள் இருந்தால் தெரியப் படுத்துங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பிளாஸ்டிக்கை ஒழிக்க, முதல்வர் அறிமுகப்படுத்திய மஞ்சள் பை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். அத்துடன் பயோ பிளாஸ்டிக் குறைந்த நாட்களில் (16 நாட்களில்) மக்குவதாக விஞ்ஞானி ஒருவர் கண்ட றிந்துள்ள செய்தியை காண முடிந்ததாக வும், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதனை முழுவதுமாக செயல்படுத்துவதிலும் சிக்கல் இருப்பதாகவும், அத்துடன் விவசாயம் சார்ந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மக்கக்கூடியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.