தேனி, ஏப்.1- தேனி மாவட்டம் போடி அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் குருசாமி மகன் முருகன் (53). இவர் போடி ஊத்தாம்பாறை புலத்தில் தனியார் தோட்டத்தில் தங்கி மாடு களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் ஜெகதீஸ்வரன் என்ற பாபு என்ப வரும் முருகனுடன் தோட்டத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ்வரன், தோட்ட உரிமையாள ரிடம் சென்று முருகனை காணவில்லை எனக் கூறியுள்ளார். இருவரும் முருகனை தேடியதில் தோட்டத்திற்கு அருகே உள்ள வாய்க்காலில் முருகன் வெட்டுக் காயங்களுடன் சட லமாக கிடந்துள்ளார். இதுகுறித்து குரங்கனி காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தோட்டத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த தில், முருகனை ஜெகதீஸ்வரன் அரிவாளால் வெட்டியதும், அவரது சடலத்தை இழுத்துச் சென்று வாய்க்காலில் போட்ட தும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து குரங்கனி காவல் துறையினர் ஜெகதீஸ்ரவனை கைது செய்தனர்.