states

பெட்ரோல், டீசல் விலை 12 நாளில் 10 முறை விலை உயர்வு

புதுதில்லி, ஏப்.2-  பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி, தன்னால் எவ்வ ளவு முடியுமோ அவ்வளவு வகையில் மக்களை வதைத்து வருகிறது. மக்களை வதைக் கும் இந்த பணியில் கடந்த 12 நாட்களில் 10 ஆவது  முறையாக எரிபொருள் விலையை உயர்த்தி மோடி அரசு புதிய ‘சாதனை’ படைத் துள்ளது. இந்த சாதனையால் மக்களின் வேதனைதான் அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ப தற்காக கடந்த ஆண்டு நவம் பர் 4 ஆம் தேதியில் இருந்து 137 நாட்களாக எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருந்தனர். 4 மாநில சட்ட மன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த அதிகாரத்திமிரில் 137 நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் எரிபொருள் விலையை உயர்த்தி தங்களது ‘சேவையை’ தொடர்ந்தனர்.   தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.61க்கும், டீசல் விலை ரூ.93.87க்கும் விற்பனை செய்யப்படு கிறது. மும்பையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 85 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல் விலை ரூ.117.57க்கும், டீசல் விலை ரூ.101.79க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தலா 76 காசுகள் அதிகரித்தது. இதனால், லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.108.21-க்கும், டீசல் ரூ.98.21க்கும் விற்பனை செய்யப் படுகிறது. பல்வேறு மாநில அரசுகள் வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால் மோடி அரசு மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றி வருகிறது.இதனால் மக்கள் கொந்த ளிப்புடன் உள்ளனர். இந்த கொந்தளிப்பும் கோபமும் பெரும் போராட்டமாக மாறி மோடி அரசுக்கு பாடம் புகட்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.