states

சிறுபான்மையினருக்கு எதிராக விஷமாகப் பேசி வெறுப்புணர்வை மூட்டுகிறார் ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்

சென்னை, ஜன.12-  சிறுபான்மையினருக்கு எதி ராக விஷமாகப் பேசி  வெறுப்பு ணர்வை மூட்டும் சதிவேலை யைச் செய்யும் ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பகவத்தின் செய லுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுகுறித்து தமிழக மக்கள்  ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர்கள் பேராசிரியர் அருணன்,  க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன்  பகவத் சிறுபான்மை மதத்தவ ருக்கு எதிராக விஷம் கக்கியுள் ளார். அவர்களது ஏடுகளுக்கு அவர் தந்துள்ள ஒரு பேட்டியில் முஸ்லிம்களைக் குறிவைத்து  தாக்கியுள்ளார். “முஸ்லிம்கள் தாங் கள் உயர்ந்தவர்கள் எனும் மேட்டி மைத்தனத்தைக் கைவிட வேண் டும். தாங்கள் உயர் இனத்தவர், இந்த நாட்டை ஆண்டவர்கள், மீண்டும் இதை ஆள்வோம், எங்க ளது பாதையே சரியானது, ஆகவே சேர்ந்து வாழ முடியாது எனும் சித்த ரிப்பை கைவிட வேண்டும்” என்று  கூறியிருக்கிறார்.

இப்படி முஸ்லிம்கள் எங்கே பேசுகிறார்கள்? பாஜக ஆட்சியில் தங்களது உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அவர்கள் தவிக்கிறார்கள். இவரோ ஒரு பொய்யுரையைக் கட்ட மைத்து, அவர்கள் மீது இந்துக் களுக்கு வெறுப்புணர்வை மூட் டும் சதிவேலையில் ஈடுபடுகிறார். “இந்துக்களின் தேசம், முஸ்லிம் களின் தேசம் என்று இரு தேசங்  கள் இங்குள்ளன” என்று பிரி வினைவாதத்தை முதலில் முன்  வைத்ததே இவர் போற்றுகிற சாவர்க்கர்தான். இதுதான் முடி வில் இந்தியாவின் பிளவுக்கு வழி வகுத்தது எனும் சரித்திர உண்மை யை மறைத்து இன்றைய முஸ்லிம்  கள் மீது அவதூறு பொழிகிறார். இந்து ராஜாக்களின் படையில் முஸ்லிம்களும், முஸ்லிம் ராஜாக் களின் படையில் இந்துக்களும் இருந்து போர் புரிந்தார்கள். நாடு பிடி யுத்தங்களை மத யுத்தங்க ளாகச் சித்தரித்து இன்றைய முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்  களை கிளப்பிவிடும் கீழ்த்தர மான செயலில் இறங்கியிருக்கி றார் ஆர்எஸ்எஸ் தலைவர்.                இந்தியருக்கு எதிராக இந்தி யரை யுத்தத்தில் இறங்கச் சொல்  லும் ஆர்எஸ்எஸ்சின் இந்தக் கொடூரக் கோட்பாட்டை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மை யாகக் கண்டிக்கிறது. சங் பரி வாரத்திற்கு எதிராக சிறுபான்மை யோர் மட்டுமல்லாது, பெரும்பான்  மையோரும் அணிதிரள வேண்டும்  என்று மேடை அறைகூவல் விடுக்கி றது. அப்போதுதான் நாட்டை மதக்  கலவர அழிவிலிருந்தும், மனு அதர்ம ஆட்சியிலிருந்தும் காக்க முடியும்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.