சென்னை, டிச. 30 - கோவில் நிலங்களில் வசிப்போர், குத்தகை விவசாயிகளின் கொரோனா கால வாடகை, குத்தகையை ரத்து செய்ய வேண்டும், 2016 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழனன்று (டிச.29) தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் நடத்திய இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: 20 வருடங்களாக தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் காரணமாக திமுக அரசு வாடகையை குறைத்தது. அடுத்து வந்த அதிமுக வாடகையை 400 விழுக்காடு உயர்த்தியது. குடி யிருப்போரை ஆக்கிரமிப்பாளர் என வகைப்படுத்தியது. இந்த பிரச்ச னைக்கு தீர்வு காண சமய நிலங்க ளில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். மக்கள் போராட்டத்தை யடுத்து கோவில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க தனது இறுதி காலத்தில் அதிமுக அரசு உத்தர விட்டது. அதனை எதிர்த்து இந்து முன்னணி போன்ற அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி உள்ளன. அறநிலையத் துறையே தேவையில்லை என்று கூறி கோவிலையும், அதன் சொத்துக்களை யும் கொள்ளையடிக்க பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் முயற்சிக்கின்றன. இத்தகைய இந்து அடிப்படைவாதிகளை எதிர்த்தும், அறநிலையத்துறையை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது.
கோவில் நிலங்களை அரசு பயன்படுத்தவும் நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றன. மக்களை வெளியேற்ற உத்தரவிடும் நீதிமன்றங்கள், அவர் களை மறுகுடியமர்வு செய்வதற்கு ஆணையிட மறுக்கின்றன. நீதி மன்றங்கள் சமூக புரிதலின்றி உத்தரவு களை பிறப்பிக்கின்றன. அறநிலைய சட்டப்படி நிலத்தை பயன்படுத்து வோருக்கு பட்டா வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு மாறாக நீதி மன்றங்கள் செயல்படுகின்றன. அரசின் கொள்கை முடிவுகளில், சட்ட வரைமுறை, நெறிமுறைகளை மீறி நீதிமன்றங்கள் செயல்படுவதை எதிர்த்து கூர்முனையாக அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறுவழியில்லை. மாநில அரசின் தலைமை செய லாளர் தலைமையில் அமைக்கப்பட்ட நியாய வாடகை குழுவிடம் அறிக் கையை பெற்று, விரைவில் சட்ட மன்றத்தில் முதலமைச்சர் நல்ல அறி விப்பை வெளியிடுவார் என்று அறநிலை யத்துறை அமைச்சர் கூறினார். அதன் பிறகு பல சட்ட மன்ற கூட்டங்கள் நடந்து விட்டன. ஆனாலும் அறிவிப்பு மட்டும் வரவில்லை.
கோவில் நிலங்களில் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு பட்டா கொடுத்தால், பயனடையும் மக்கள் திமுக-விற்குதான் வாக்களிப் பார்கள். எனவே, அரசு ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றியும், வசதி படைத்தவர்களிடம் உரிய தொகையை பெற்றுக் கொண்டும் பட்டா வழங்க வேண்டும். வாடகை நிர்ணயக் குழு அறிக்கை தருவதற்கு முன்பாக அதிகாரிகளின் அத்துமீறலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அடிப்படைவாதிகளுக்கு அஞ்சு கிறீர்களா? ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம், “துறை அதிகாரிகள், அமைச்சர்களிடம் தொடர்ந்து பேசியும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. பட்டா வழங்க அரசுக்கு எந்தவித நிதிச் செலவினமும் இல்லை. ஒரு அரசாணை மூலம் நிறைவேற்றக்கூடிய பணியை காலம் தாழ்த்துவது சரியல்ல. அரசின் நடவடிக்கைக்கு எதிராக செயல்படும் இந்து அடிப்படைவாதிகளை கண்டு அரசு அஞ்சத் தேவையில்லை. அத்த கையோரை பயனாளிகள் எதிர் கொள்வார்கள். தில்லி விவசாயிகள் போராட்டத்தை போன்று தொடர் இயக்கம் நடத்தி பட்டாவை பெறுவோம்” என்றார்.