“திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சித் தலைவராக பட்டிய லின சமூகத்தை சேர்ந்த திருமதி இந்துமதி க/பெ பாண்டியன் அவர் கள் கடந்த 2021இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை யும் பெற்றுள்ளார். இதனை எதிர்த்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பட்டியலி னத்தவர் எண்ணிக்கையில் குறை வாக இருப்பதால் தனித்தொகுதி என்ற அறிவிப்பை ரத்து செய்திட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஆரம்ப நிலையிலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவ ரது மேல்முறையீட்டு மனு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள் ளது என்று கூறி இந்துமதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து 3.9.2023 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பி. காத்தவராயன்,வே. குபேந்திரன் மணிமாறன் ஆகியோரும், 6.9.2023 அன்று வழக்கறிஞர்கள் மருதன், சிவா, பாலகுமார் ஆகியோருட னும் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகியோர் களை சந்தித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் 9.9.2023 அன்று மாலையிலிருந்து இந்துமதி அவர்களைக் காணவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.இது குறித்து அவரது கணவர் பாண்டி யன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக உட னடியான தலையீடுகளை மேற் கொண்டு இந்துமதியைக் கண்டு பிடித்து ஊராட்சி மன்ற தலைவ ராக பதவி பிரமாணம் செய்திட வேண்டும்.” இவ்வாறு அவர்கள் அறிக்கை யில் கேட்டுக்கொண்டுள்ளனர்.