states

சொத்துக்குவிப்பு வழக்கில் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, ஜூன் 29- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள் ளிட்டோர் மீதான வழக்கில் விரை வாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச் சராக இருந்த கே.பி.அன்பழகன், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி  லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்  கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின்போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வரு மானத்திற்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய்  சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல்  தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்த னர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தும் இன்னும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று புகார்தாரரான கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை  காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.