states

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுக!

கரூரில் விஷவாயு தாக்கி பலியானவர்களின்  குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிடுக!

கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையத்தில், கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பொழுது விஷவாயு தாக்கி  இறந்துபோன மோகன்ராஜ், அவரை காப்பாற்ற முயற்சி செய்த போது சிவா, ஜீவா ஆகிய   இரு தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி மரண மடைந்துள்ளனர். இதில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமை யான சட்ட நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதனை கண்காணிக்க தவறிய உள்ளாட்சி அதிகாரிகள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவது சட்டப்பூர்வ மாக தடை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், தமிழகத்தில் இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதனை தடுத்திட  இச்சட்டம் குறித்த உரிய விழிப்புணர்வோ, கழிவு அகற்றுவதற்கான நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய அக்கறையோ தமிழ்நாட்டில் போதுமான அளவு இல்லை.

கழிவுநீர் தொட்டியில் உயிரிழப்பு அரசு - தனியார் வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பிலும் தவறுகள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே சட்டத்தை கறாராக அமல்படுத்திட தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், இச்சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை தலா ரூ.10 லட்சம்  உடனடியாக வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்   கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவது தடை செய்யப்பட்டாலும், அதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை உறுதி செய்யப்படாத காரணத்தால், மீண்டும் மீண்டும் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுவதும், அதனால் தொடர் மரணங்களும் நடந்து வருகிறது. எனவே இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை கணக்கிட்டு, அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பினை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை,நவ.16-  கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழுக் கூட்டம் நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் திரு வண்ணாமலையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 16 இரண்டாம் நாள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்க னை பிரியாவின் மரணம் மிகு ந்த வேதனை தருகிறது. அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சில நாட்கள் முன், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்த வீராங்கனை பிரியாவிற்கு, அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. ஆனால் சிகிச்சையில் ஏற்பட்ட தவறின் காரணமாக அவரின் உறுப்புகள் செய லிழந்து,  இறுதியில் உயிரே  பறிபோனது. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கட்டுப்போடும்போது இறுக்க மாக இருந்ததால் அது ரத்த  நாளங்களை அடைத்துள்ள தும், அதனாலேயே மரணம் ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளன. அரசு, ரூ. 10 லட்சம் இழப் பீடு அறிவித்துள்ளது. என்ன செய்தாலும் ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். மருத்துவர்களின் அலட்சி யம் காரணமாகவே இத்தகைய  துயரச் சம்பவம் நடைபெற்றுள் ளது. எனவே, பிரியாவின் மர ணம் குறித்துவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மரணத் திற்கு காரணமானவர்கள் தண்டி க்கப்படுவதுடன் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், கூடுதல் இழப்பீடும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசாங்க மும், மருத்துவத் துறையும் இது போல் இனியொரு மரணம் நடக் காத விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.