states

அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடக்கூடாது என்பதையே உச்சநீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது

சென்னை, நவ. 11- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் நிலை பாட்டிற்கு  ஆதாரமாக தீர்ப்பு அமைந் துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில்  அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சி யாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலை நாட்டும் வகையில்தான் பேரறி வாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் முன்பு உத்தரவிட்டது. நளினி,  ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோ ரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறி வாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது  பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவு களை நியமனப் பதவிகளில் இருக்கும்  ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்பு ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரை யாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீதிக்குக் கிடைத்த வெற்றி

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை குறித்து ஒன்றிய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் ஒன்றிய அரசிடம்  கருத்துக் கேட்டதாகவும், ஒன்றிய  அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் நடத்தி வந்தனர். இதற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து ஏற்கனவே பேரறிவாளனையும் தற்போது மற்ற ஆறு பேரையும் விடு தலை செய்து இருப்பது நீதி வென்றே  தீரும் என்பதை நிலைநாட்டி இருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தவறிழைத்த ஆளுநர் 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்  இந்த ஆறு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக சட்டமன்றப் பேரவை நிறை வேற்றிய தீர்மானத்தின் மீதும், தமிழக அரசின் கடிதங்கள் மீதும் அரசி யலமைப்பு அதிகாரம் பெற்ற ஆளு நரும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக் கைகளை மேற்கொண்டு காலத்தில் விடுதலை செய்ய தவறிவிட்டனர். இதன்  தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் நளினி  உள்ளிட்ட ஆறு பேர்களையும் விடு தலை செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில  செயற்குழு வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் பதவி விலகுவாரா?

திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி விடுத்துள்ள அறிக்கையில் பேரறி வாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும்  பொருந்தும் என்று கூறி, உச்சநீதி மன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறோம்.  தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது -சட்டப் பிழை என்பதற் கான சான்றே இந்தத் தீர்ப்பு. உச்சநீதி மன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு’க ளுக்கு பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா? இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து (161 ஆவது பிரிவின்படி) தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.