கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
புதுதில்லி, மே 18- “ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும்” என்று கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அர சியல் சாசன அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. “ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வா? என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்க முடியும்; நீதி மன்றம் அதில் தலையிட முடியாது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், “தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 முன்வைக்கும் அடிப் படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை” என்றும் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:
2014ல் விதிக்கப்பட்ட தடை
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமா னது, கடந்த 2011-ஆம் ஆண்டு, காளைகளை விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் காட்சிப் படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. இதனைச் சுட்டிக்காட்டிய, விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA), உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அதில், காளைகளைக் காட்சிப் படுத்தக் கூடாது என்பதால், தமி ழகத்தில் காளைகளை வைத்து நடக் கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியது. உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்று. 2014 மே 8 அன்று ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. இதனால் கடந்த 2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஜல்லிக் கட்டு நடைபெறவில்லை. ஆனால், இந்த தடைக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு, தமிழ்நாடே கொதித்தெழுந்து போராட்டம் நடத் தவே, விலங்குகள் வதைச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. இந்த அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் மற் றும் குடியரசுத் தலைவரின் ஒப்புத லும் பெறப்பட்டது. பின்னர், விலங்கு கள் வதைத் தடுப்புச் சட்டம் (தமிழ் நாடு திருத்தம்)-2017 என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதனடிப்படையில், தமிழ்நாட் டில் தற்போதுவரை ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சட்டத்தைப் பின் பற்றி, மகாராஷ்டிர அரசும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்க சட்டத் திருத்தம் செய்தது. எனினும், ஜல்லிக்கட்டில் காளை களை வீரர்கள் துன்புறுத்துகிறார்கள்; காளைகள் கொல்லப்படுகின்றன; சட்டப்படி இது தவறு; ஆனால் தமிழ் நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து உள்ளது; இந்த சிறப்புச் சட் டத்தை நீக்க வேண்டும் என்று ‘பீட்டா’ (People for the Ethical Treatment of Animals - PETA), ‘கூபா’ (Compassion. Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
எதிர் மனுதாரர்கள்
தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் பிரதான எதிர்மனுதாரராக இருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பி னருமான சு. வெங்கடேசன், முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பீட்டா மற்றும் கூபா-வுக்கு எதிராக இந்த வழக்கில் இணைந்தனர். இந்த மனுக்களை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதி பதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 2022 ஆண்டு நவம்பர் 23 அன்று விசாரிக்கத் தொடங்கியது. முதலில் மனுதாரர்கள் தரப்பி லும், அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் தரப்பி லும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
திருத்தச் சட்டம் செல்லும்
கடந்த 2022 டிசம்பர் 8 அன்று இறுதி வாதங்கள் நடைபெற்றன. இந்த வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை, டிசம்பர் 12 அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக் குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வியாழ னன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில், “தொன்மையான கலாச் சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது” என்றும், ஜல்லிக் கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழ் நாடு அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் செல்லும்” என்றும் நீதிபதி கள் உத்தரவிட்டனர். “ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட 5 கேள்வி களுக்குப் பதிலளித்து, தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்க ளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. ஜல்லிக்கட்டை பண்பாட் டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடி யாது. ஜல்லிக்கட்டு கலாசார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும்.
ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதி னால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தொன்மை யான கலாச்சார ரீதியான விஷ யங்களில் நாங்கள் தலையிட முடி யாது. அப்படியே தலையிடுவதாக இருந்தாலும் இதில் சட்டப்பேரவை ஒரு முடிவு எடுத்த நிலையில் அதில் நாங்கள் தலையிட முடியாது. சட்ட மன்றத்தின் முடிவை, அதன் பார்வை யை நாங்கள் எதிர்க்க மாட்டோம். மேலும், தமிழ்நாடு அரசின் சட்டத் திற்கு குடியரசுத் தலைவர் ஒப்பு தல் தந்ததால் அதில் தவறு இருப்ப தாகவும் கருதவில்லை. தமிழ்நாடு அரசு கொண்டு வந் துள்ள சட்டம் விதிவிலக்கிற்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும்” என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
எதிரான மனுக்கள் தள்ளுபடி
முன்னதாக, “தமிழ்நாடு சட்டம் காளைகளுக்கு ஏற்படும் கொடுமை யை பெரும்பான்மையாக குறைத் துள்ளது. கலாச்சாரம் என்ற வகை யில் இருந்தாலும் கூட அதில் துன்பு றுத்தல் என்று வரும் பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறை கள் முழுமையாக கடைப்பிடிக்கப் பட வேண்டும்” என்று குறிப்பிட்ட நீதி பதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர். இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முழுமையாக விலகியுள்ளது. மகாராஷ்டிராவில் நடத்தப்படும் மாட்டுவண்டிப் பந்தயம், கர்நாட கத்தில் நடத்தப்படும் கம்பளா போட்டிகளுக்கு எதிராகவும் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தீர்ப்பு மூலம் அவையும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.